வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை உலக சந்தைகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு இந்திய பங்குச் சந்தை மற்றும் நிறுவனங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.
குறிப்பாக இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோவுக்கு இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று இந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பஜாஜ் ஆட்டோவின் நிலை
பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா தெரிவிக்கையில், வெனிசுலாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்சர் மற்றும் பாக்ஸர் மாடல்கள் அந்நாட்டில் பிரபலமானவை என்றாலும், நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றார்.
வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை பெரிதாக பாதிக்காது என்று அவர் உறுதிப்படுத்தினார். 2026ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் பஜாஜ் ஆட்டோவின் மொத்த ஏற்றுமதி 19 சதவீதம் உயர்ந்து 16,39,971 வாகனங்களாக உள்ளது. இது நிறுவனத்தின் பலம் வெளிநாட்டு சந்தைகளில் பரவியுள்ளதை காட்டுகிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 0.62 சதவீதம் சரிந்து 9499.00 ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தின் 52 வார உயர்வு விலை 9,633.00 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் சிறிய அளலிலான தடுமாற்றம் இருந்தாலும் வெனிசுலா தாக்குதல் முதல் நீண்ட கால பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா-வெனிசுலா வர்த்தகம்
க்ளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், அமெரிக்க தடைகள் காரணமாக இந்தியாவின் வெனிசுலா உடனான வர்த்தகம் ஏற்கனவே குறைந்துள்ளது என்றார்.
2025ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 81.3 சதவீதம் குறைந்தது. மேலும் இருநாடுகள் மத்தியிலான வர்த்தகமும் மிகக் குறைவாக உள்ளது. எனவே வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் இந்தியாவின் பொருளாதாரம் அல்லது எரிசக்தி பாதுகாப்புக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்தார்.
உலக எண்ணெய் சந்தை அசைவு
வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு என்றாலும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தடைகளால் இதன் வர்த்தகம் குறைந்துள்ளது. வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் எண்ணெய் விலையை சிறிய அளவில் உயர்த்தலாம் என்றாலும், உலக சந்தையில் உபரியாக சப்ளை உள்ளதால் பெரிய மாற்றம் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவுக்கு இது நேரடி பாதிப்பை ஏற்படுத்தாது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications