சிலர் தங்கள் கனவில் வருவது நிஜத்தில் நிகழ்வதாக கூறுவதை கேட்டிருப்போம். இது போன்ற சம்பவம் உண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்துள்ளது. மேரிலாந்தின், பிரின்ஸ் ஜார்ஜ் கவுண்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் 50,000 டாலர் லாட்டரி பரிசை வென்றுள்ளார். இது இந்திய மதிப்புக்கு ரூ. 42.96 லட்சமாகும். இவருடைய வெற்றியை இன்னும் சுவாரசியமாக்குவதே லாட்டரி நம்பர் தனக்கு கனவில் வந்ததாக அந்தப் பெண் கூறியதுதான். அப்பெண் தான் கனவில் தோன்றிய நம்பரை வைத்து தான் டிக்கெட் வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.
கனவில் தோன்றிய நம்பர்: லாட்டரியை வென்ற பெண்மணி, மெரிலாந்து லாட்டரி அதிகாரிகளிடம், டிசம்பர் மாதம் தனக்கு ஒரு தெளிவான கனவு வந்ததாகவும், அதில் குறிப்பிட்ட எண்கள் தொடர்ச்சியாக தோன்றியதாகவும் தெரிவித்தார். இந்த உணர்வை மட்டுமே நம்பி, அவர் ஆக்ஸன் ஹில் ஜிப் மார்ட்டில் இருந்து 9-9-0-0-0 என்ற எண்களுடன் ஒரு பிக் 5 லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

தனக்கு வந்த கனவை பற்றி நினைவுகூர்ந்த அந்தப் பெண், "இந்த வாய்ப்பை நான் தவற விட்டிருப்பேன்.. கனவு வந்து நீண்ட நாட்கள் கழித்து தான் நான் விளையாடினேன்.. இன்னும் சொல்லப்போனால் விளையாடுவதற்கே மறந்து விட்டேன்.. என்றாவது ஒரு நாள் என் கனவில் வந்த எண்களை வைத்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.. அதற்கு ஏதுவாக டிசம்பர் 20 அன்று இந்த பரிசை பெற்றேன்" என்று 50,000 டாலர் பரிசை பெற்ற பெண்மணி கூறியுள்ளார்.
வெற்றி பெற்ற பெண்மணி தன் கனவு குறித்து முதன் முதலில் தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் தன் மனைவி கூறியதில் அவருக்கு துளியும் நம்பிக்கையில்லை. லாட்டரி விழுந்த பிறகு தான் அவருடைய கணவரும் நம்பியுள்ளார். புதிதாக கிடைத்த செல்வத்தை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, வெற்றி பெற்ற பெண்மணியின் கணவர், "என் மனைவிக்கு பிடித்த அனைத்து விஷயங்களையும் செய்து கொள்ளட்டும்", என்று கூறியுள்ளார்.
இதேபோல கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சிதம்பரம் ஒரு அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ. 8.45 கோடி பரிசை பெற்றார் இதன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனார். வருடா வருடம் முஸ்தபா ஜுவல்லரியில் நடத்தப்படும் ஒரு குலுக்கலில் பங்கேற்று தனது மனைவிக்காக தங்க சங்கிலியை வாங்கியுள்ளார். அப்போதுதான் இவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. பின்னர் கடை இந்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தது. அதிர்ஷ்டம் என்பது எப்போது வேண்டுமானாலும் எந்த வழியில் வேண்டுமானாலும் நம்மை தேடி வரலாம் என்பதை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

ஈரானில் உச்சகட்ட பதற்றம்: கமேனி படுகொலை அடுத்து இடைக்கால ஆட்சியாளர் நியமனம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications