அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரக்கூடிய ஜேபி மார்கன் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் மேகன் பிரவுன். கடந்த 2015 ஆம் ஆண்டு அலுவலகத்தின் கண்ணாடி கதவு உடைந்து தலையில் விழுந்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்துக்காக அவருக்கு தற்போது 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 292 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மேகன் பிரவுன் வழக்கம் போல தன்னுடைய அலுவலகத்தின் கண்ணாடி கதவை திறக்கும் போது ,எதிர்பாராத விதமாக ஏழரை அடி உயரமுள்ள அந்த கண்ணாடி கதவானது திடீரென உடைந்து சிதறி அவரது தலையில் விழுந்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இந்த விபத்து அவரது மூளையில் ஒரு காயத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. அப்போது பிரவுனுக்கு வயது 27.
மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தன்னுடைய பணியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த அவர் கட்டட உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் துறையில் மிகப்பெரிய ஆய்வாளராக வர இருந்த நிலையில் இந்த ஒரு சம்பவம் அதனை தடுத்து நிறுத்தி விட்டதாக கூறியிருந்தார். தன்னுடைய அன்றாட வாழ்க்கை சவால் மிகுந்ததாக மாறி விட்டது என்றும் கூறியிருந்தார்.

இந்த காயம் காரணமாக ருசியை அறியும் திறன் மற்றும் வாசனையை உணரும் திறன் ஆகியவற்றை இழந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிதிருந்தார். இந்த சம்பவத்திற்கு முன்பாக தான் ஸ்பானிஷ் மொழியை சிறந்த முறையில் பேசி வந்ததாகவும் , காயம் காரணமாக தான் முற்றிலும் அந்த மொழியையே மறந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பல கட்ட விசாரணைகள் நடைபெற்றது.
இதில் பிரவுனுக்கு பிடிஎஸ்டி எனப்படும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது அவரது மூளை செயல்பாட்டுத் திறன் குறைந்தது மற்றும் அவரது நினைவாற்றல், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் மற்றும் மொழித்திறன் ஆகியவற்றை இழந்து விட்டதாக மருத்துவ அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நிகழ்ந்த ஓராண்டுக்குப் பிறகு பிரவுன் மீண்டும் ஜேபி மார்கன் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அவரால் முன்பை போல திறமையாக பணி செய்ய முடியவில்லை. இதனை அடுத்து அந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து நீக்கியது.
இந்த வழக்கின் அனைத்து கோணங்களையும் விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் இந்த சம்பவம் நிகழ்ந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மேகன் பிரவுனுக்கு 292 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கட்டட உரிமையாளருக்கு உத்தரவிட்டது.
தற்போது அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்தக் கட்டடத்தின் உரிமையாளரின் அலட்சியப் போக்கே காரணம் என்றும் முறையாக கதவுகளை பராமரிக்காததே காரணம் என்றும் கூறிய நீதிமன்றம், கட்டடத்தின் உரிமையாளர் இந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
Story written by: Devika
More From GoodReturns

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications