இந்தியா முதல் அமெரிக்கா வரையில் பணியிடத்தில் நடக்கும் கடுமையான நிர்வாக முறை குறித்து சமுகவலைத்தளம் முதல் லின்கிடுஇன் வரையில் அதிகளவில் விவாதம் நடந்து இதே நேரத்தில், நாரணயமூரத்தி போன்ற மூத்த தொழிலதிபர்கள் வாரத்திற்கு 70 மணிநேரமும், சில இளம் ஸ்டார்ட்அப் முதலாளிகள் வாரம் 84 மணிநேரம் வரையில் ஊழியர்களை பணியாற்ற வற்புறுத்தி வருகின்றனர்.
இவை அனைத்திற்கும் ஒரு படிக்கு மேலாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சிறிய நிறுவனத்தின் சிஇஓ, 99 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிறுவனம் இசைக்கருவிகளுக்கான ஒரு ஈகாமர்ஸ் தளத்தை நடத்தி வருகிறது. பிலாட்வின் என்ற இந்த நிறுவனத்தின் சிஇஓ திடீரென நிறுவனத்தின் ஸ்லாக் சேனலில் ஒரு கோபமான செய்தியை வெளியிட்டு 111 பேர் கொண்ட நிறுவனத்தில் வெறும் 11 பேரை மட்டும் வைத்துக்கொண்டு 99 பேரை உடனடியாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த செய்தி வந்த நாளில் தான் இந்நிறுவனத்தில் சில இன்டர்ன் ஊழியர்கள் பணிக்கு சேர்ந்துள்ளது. இவர்கள் பணிக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெரும்பாலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் Reddit தளத்தின் வாயிலாக பகிரப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் சிஇஓ பிலாட்வின் அன்று காலை அனைத்து ஊழியர்களையும் ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த விர்ச்சுவல் கூட்டத்திற்கு வெறும் 11 பேர் மட்டுமே வந்திருந்த நிலையில் மற்ற அனைவரையும் பணிநீக்கம் செய்வதாக காரசாரமான விமர்சனத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் ஸ்லாக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பணிநிக்கம் குறித்து அறிவித்துள்ளார்.
பிலாட்வின் தனது மெசேஜில் "இன்று காலை விர்ச்சுவல் கூட்டத்திற்கு வராதவர்களுக்கு இது உங்களுடைய அதிகாரப்பூர்வ நோட்டீஸ்: நீங்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள்" என்று கூறியுள்ளார்.

"110 பேரில் 11 பேர் மட்டுமே இன்று காலை வந்திருந்தார்கள். அந்த 11 பேரும் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றலாம், மற்றவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இப்போதே என் பிஸ்னஸ்-ஐ விட்டு வெளியேறுங்கள்," என்று அவர் கடுமையான உத்தரவிட்டுள்ளார்
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் சிஇஓவின் செயல்பாட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சிலர் கூட்டம் குறித்து ஊழியர்களுக்கு முறையான முன்அறிவிப்பு வழங்கப்படாததால் இப்படியொரு மோசமான நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.
More From GoodReturns

இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ் திடீர் ராஜினாமா.. கண்ட்ரோல்-ஐ கையில் எடுக்கும் ராகுல் பாடியா..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications