அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை திடீரென நான்கு உயர்மட்ட நாடாளுமன்ற தலைவர்களை அடுத்த வாரம் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார். அமெரிக்க உயர்மட்ட ஆட்சியின் இந்த கூட்டத்திற்கு முக்கியமான காரணம் இருப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்களின் வாழ்வியலை இந்த கூட்டம் தலைகீழாக மாற்றும் என்றாலும் மிகையில்லை.
உலகின் மாபெரும் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவிடம் ஜூன் மாதத்திற்கு பின்பு தனது செலவுகளுக்கு நிதி செலுத்த போதுமான பணமில்லை. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பதற்குள் சரி செய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்க அரசின் உயர்மட்ட குழு முக்கிய கூட்டத்தை கூட்டியுள்ளது.

அமெரிக்க அரசின் கருவூலம் வெளியிட்ட அறிவிப்பில் அரசின் கடன் வரம்பு அதிகரிப்பு செய்யாவிட்டால் ஜூன் மாதத்திற்கு பின் அரசின் செலவுகளுக்கு போதுமான பணம் இல்லாமல் போகலாம் என்று அறிவித்துள்ளது. மே 9 அன்று குடியரசுக் கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி உள்ளிட்ட தலைவர்களை ஜோ பைடன் அழைக்க இதுதான் காரணம்.
அமெரிக்க அரசின் கருவூல செயலாளர் ஜெனட் யெல்லன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஜூன் மாத தொடக்கத்தில் அல்லது ஜூன் 1 ஆம் தேதிக்கு முன்னதாக காங்கிரஸின் நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்க அரசு மக்கள் சேவைகளுக்கும் பிற அனைத்து நிதி செலவுகளுக்கும் நிதியை திரட்ட முடியாது. இந்த நிதி பற்றாக்குறை பிரச்சனையை விரைவாக சரி செய்ய வேண்டும் என ஜெனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் அழைத்துள்ள கூட்டத்தில் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, ஹவுஸ் டெமாக்ரடிக் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானெல் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த வாரம் குடியரசுக் கட்சி அமெரிக்க அரசின் கடன் அளவை அதிகரிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தில் அரசு தனது செலவுகளை குறைக்கும் திட்டங்களும் இருக்கும் காரணத்தால் இதை எற்க முடியாது என அறிவித்துள்ளது பைடன் கட்சி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கு தீர்வு காணவே கெவின் மெக்கார்த்தி, ஹவுஸ் டெமாக்ரடிக் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானெல் ஆகியோரை ஜோ பைடன் அழைத்துள்ளார். இது மட்டும் நடக்காவிட்டால் முக்கியமான பில்களுக்கு அரசு பணத்தை செலுத்த முடியாது.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications