உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன் சாஸ், இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குச் சுமார் 16 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக அறிவித்திருந்தது. ஜேபி மோர்சன் சாஸ் அறிவித்துள்ள 16 மில்லியன் டாலர் தொகையில் சுமாப் 3.8 மில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்நிறுவன ஊழியர்களுக்காக மட்டுமே அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 35,000 ஊழியர்களை வைத்து இந்திய வர்த்தகச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பணியாற்றி வருகிறது.
இந்தியாவில் இருக்கும் தனது ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து 3.8 மில்லயன் டாலர் அளவிலான தொகையைக் கொரோனா நிதியாக அறிவித்துள்ளது.
ஜேபி மோர்கன் சாஸ் ஊழியர்கள்
ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவரான பிலிப்போ கோரி நிர்வாகத்திற்குள் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வர்த்தகத்தில் பணியாற்றும் 35,000 ஊழியர்களின் நலன் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காகச் சுமார் 3.8 மில்லியன் டாலர் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும், கூடுதலாக 10 மில்லியன் டாலர் அளவிலான தொகை இந்திய மக்களுக்கு உதவுவதாகவும் தெரித்துள்ளார்.
ஊழியர்கள் மகிழ்ச்சி
மேலும் ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனம் ஏப்ரல் 30ஆம் தேதியே 2 மில்லியன் டாலர் தொகையை இந்திய மக்களுக்கு உதவ அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் அறிவிப்பு மூலம் 35,000 ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது மட்டும் அல்லாமல் நெகிழ்ந்துள்ளனர்.
மருத்துவ உதவிகள்
இந்தத் தொகையை வைத்துப் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மருத்துவ உதவி, 24X7 ஆம்புலன்ஸ் சேவை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ நிறுவனங்களுடன் கூட்டணி, ஹோட்டல், மருத்துவமனை, வீட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், டாக்டர் ஆன் கால் வசதி, தடுப்பு மருந்து ஆகியவற்றை 35,000 ஊழியர்களுக்கும் சென்றடைய வேண்டும் என ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவரான பிலிப்போ கோரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து
இதேபோல் இந்தியாவில் தனது ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்திய மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து பெற வேண்டும் என்பதற்காக அரசுக்குப் பல வகையில் உதவி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனம் இந்த உதவிகளை ஒவ்வொரு ஆண்டும் செய்யும் 32 மில்லியன் டாலர் மதிப்பிலான நன்கொடை செயல்களுக்குக் கீழ் செய்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications