ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், ரஷ்யாவுக்கு எதிராக தடை விதித்து வருகின்றன. குறிப்பாக இப்பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து வருகின்றது.
குறிப்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்தினை முடக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஏற்கனவே ஸ்விப்ட் தடை முதல் கொண்டு எரிபொருள் தடை வரையில் பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
பல தடைகள்
ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி, தனி நபர்கள், ரஷ்யாவின் பல முன்னணி நிறுவனங்கள் பொருட்கள், ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை, ரஷ்ய எரிபொருளுக்கு தடை என எந்த வகையில் எல்லாம் ரஷ்யாவினை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்த முடியுமோ? அந்த வகையில் எல்லாம் முடக்கியது.
அமெரிக்காவின் புதிய தடைகள்
தற்போது உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில், அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ள நிலையில், அமெரிக்க புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகின்றது. ஐரோப்பிய நாடுகளும் தடைகள் குறித்து திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் ஸ்ப்போரீஷியா, கெர்சோன் உள்ளிட்ட பகுதிகளை இணைத்துக் கொண்டதாக ரஷ்யா தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு பலன்
தற்போது அமெரிக்காவின் தடை பட்டியலில் அலுமினியமும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அலுமினியம் விலையும் உச்சம் தொடலாம். இது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்திய நிறுவனங்களான ஹிண்டால்கோ, வேதாந்தா, நால்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ஏற்றம் காண ஆரம்பித்து விட்டன.
ஆதரவாக அமையலாம்
அலுமினியம் தடை என்ற தகவல்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையிலும் அலுமினியம் விலையானது பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது. இந்த நிலையில் தான் இந்திய அலுமினிய உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளார்கள் இதனால் பலன் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கண்ட சில இந்திய நிறுவனங்கள் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. இது இனியும் நிறுவனங்களுக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
அதோடு இந்தியாவில் அலுமினியத்திற்கான தேவை அதிகம். ஆக விலை அதிகரித்தால் வேதாந்தா, ஹிண்டால்கோ, நால்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடையலாம். இது தற்போதைய நிலையில் இருந்து மேற்கோண்டு 15% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications