பாதுகாப்பு துறை: ரூ.25,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை தட்டிச்சென்ற உத்தர பிரதேசம்..!

உத்தரபிரதேசம்: இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் ஆயுதங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட தொழிற்பேட்டைகளை நிறுவுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவற்றின் மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு துறை: ரூ.25,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை தட்டிச்சென்ற உத்தர பிரதேசம்..!

2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட உற்பத்தி 1.27 ட்ரில்லியன் ரூபாய் என்ற அளவை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 16.7 சதவீதம் அதிகமாகும். இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட 25,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் கையெழுத்தாகியுள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக லக்னோ, கான்பூர், ஜான்சி, மற்றும் ஆக்ரா ஆகிய மாவட்டங்களில் இவை அமைய உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தில் சுமார் 40,000 வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக கூடும் என தெரிகிறது. இதன் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய உள்ளது.

கான்பூர் மாவட்டத்தில்தான் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாக தெரிகிறது. அதாவது இங்கே பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு பொருட்கள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 218 ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே ஐந்து நிறுவனங்கள் தங்களது ஆலைகளை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளன.

அதானி குழுமம் கான்பூரில் வெடிப்பொருட்கள் தயாரிக்கும் ஆலையை பிப்ரவரி மாதத்திலேயே செயல்படுத்த தொடங்கிவிட்டது. இதற்காக 1500 கோடி ரூபாயை அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. அடுத்ததாக மாடர்ன் மெட்டீரியல் அண்ட் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ராணுவ வீரர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவியுள்ளது இதற்காக 38 கோடி ரூபாயை இது முதலீடு செய்துள்ளது.

நேத்ரா குளோபல் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆனந்த் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களும் சுமார் 4000 கோடி மதிப்பில் இங்கே தங்களது உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன. எனவே கான்பூர் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் உத்திரபிரதேச அரசு 62 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுவரை 210 ஏக்கர் நிலங்கள் பல்வேறு நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி உத்திரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு துறை சம்பந்தமாக 154 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்கின்றனர். மேலும் 40 நிறுவனங்களுக்கு தேவையான நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 8,000 கோடி ரூபாய் முதலீடு இங்கே வரும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+