உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல், ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்தரப் பிரதேச அரசுக்குத் தனது முழுச் சொத்தையும் நன்கொடையாக அளித்துள்ளார்.
இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய். இவர் கடந்த 50 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொராதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல், இப்பகுதியில் மக்களுக்குக் குறிப்பாக ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்து சிகிச்சைகளை அளித்து வரும் காரணத்தால் மிகவும் பிரபலமானவராக உள்ளார்.
50 ஆண்டு உழைப்பு
கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றும் அரவிந்த் கோயல் தனது சொத்துக்கள் அனைத்தையும் உத்தரப் பிரதேச மாநில அரசு பயன்படுத்திக்கொள்ளவும், உரிமை கொள்ளவும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 600 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அழர் பணிபுரிந்து வருவதாகவும் கூறினார்.
600 கோடி ரூபாய் சொத்து
தனது சொத்துகளை உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்ற முடிவை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே அரவிந்த் கோயல் மற்றும் அவருடையை மனைவியும் இணைந்து முடிவு செய்துள்ளதாக அரவிந்த் கோயல் கூறினார்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றின் போது மொராதாபாத் சுற்றியுள்ள 50 கிராமங்களைத் தத்தெடுத்து மக்களுக்கு இலவச வசதிகளை அரவிந்த் கோயல் வழங்கியுள்ளார். அவர் மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச கல்வி மற்றும் சிறந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
நான்கு குடியரசுத் தலைவர்கள்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி பாட்டீல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உட்பட நான்கு முறை குடியரசுத் தலைவரால் டாக்டர் கோயல் கௌரவிக்கப்பட்டு உள்ளார்.
அரவிந்த் கோயல் குடும்பம்
அரவிந்த் கோயல் மற்றும் அவரது மனைவி ரேணு கோயல் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சொத்தின் உண்மையான விலையைக் கணக்கிட ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications