சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டுடன் போட்டிப்போடும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் செமிகண்டக்டர் தொழிற்பூங்கா கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜெவர் பகுதியில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைக்கப்பட உள்ளது.
இந்த செமிகண்டக்டர் தொழிற்பூங்காவில் மூன்று நிறுவனங்கள் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க இதுவரையில் ஒப்புதல் பெற்றுள்ளன. இந்த 3 நிறுவனத்தின் தொழிற்சாலைக்காக உத்தரப் பிரதேச அரசு, செக்டார் 10 மற்றும் செக்டார் 28ல் மொத்தம் 225 ஏக்கர் நிலத்தில் செமிகண்டக்டர் சிப் டெஸ்டிங் ஆலை தயாரிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

யமுனா வளர்ச்சி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் வீர் சிங் இதுகுறித்து கூறுகையில் சுமார் 50 ஏக்கர் நிலம் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க செக்டர் 10-ல் கேனஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட் மற்றும் வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதோடு 125 ஏக்கர் நிலம் மற்றொரு நிறுவனத்திற்கு செக்டர் 28-ல் ஒதுக்கப்படும். இந்த நிறுவனங்களின் ஒப்புதல் தற்போது மத்திய அரசிடம் இருந்து பெற காத்திருக்கிறது. ஒப்புதல் பெற்ற பின்பு 3 நிறுவனங்களும் தங்களது கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும், இதோடு இதன் வளர்ச்சியை மாநில அரசு கூர்ந்து கவனிக்கும் என தெரிவித்துள்ளார்.
வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் அமைக்கும் தொழிற்சாலையில் மொத்தம் 13,780 பேர் வேலைவாய்ப்பு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாதத்திற்கு 2.40 லட்சம் சிப்ஸ் தயாரிக்கும் மற்றும் 19 MW மின்சாரம் மற்றும் 2,000 MLD தண்ணீர் தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கேனஸ் காம் நிறுவனமும் தனது 50 ஏக்கரில் அமைக்கும் தொழிற்சாலைக்கு MVA அளவிலான மின்சாரம் தேவைப்படும். மூன்றாவது TURCK நிறுவனத்திற்கு 125 ஏக்கர் நிலம் யமுனை வளர்ச்சி ஆணையத்தால் வழங்கப்படும். மூன்று நிறுவனங்களும் ஒதுக்கப்பட்ட மூன்று பகுதிகளில் ரூ. 40,000 முதல் 80,000 கோடி வரை முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications