இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும் அமெரிக்கா, சீனாவுக்கு இணையாகவோ அல்லது போட்டிப்போடும் அளவிலோ இல்லை. ஆனால் உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருப்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இப்படியிருக்கும் வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது பொருளாதார ஆராய்ச்சி துறை SBI Ecowrap முக்கிய அறிக்கை வெளியிட்டு உள்ளது.
SBI Ecowrap வெளியிட்டுள்ள அறிக்கையில் 2028 ஆம் நிதியாண்டுக்குள் இந்தியா, உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என கணித்துள்ளது. 2014 ஆம் நிதியாண்டில் உலக பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் மார்ச் 2023 வெளியான பொருளாதார தரவுகள் படி 2028 ஆம் நிதியாண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளையும் பின்னுக்குத்தள்ளி 3வது இடத்திற்கு உயரும் என தெரிவித்துள்ளது.
தற்போது பொருளாதார வளர்ச்சி வேகத்தில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு ஒவ்வொரு 2 வருடத்திற்கும் 0.75 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும். இது தொடரும் பட்சத்தில் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 20 டிரில்லியன் டாலராக உயர உள்ளது என SBI Ecowrap வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதோடு 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இரு மாநிலங்கள் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜிடிபி-யை பெறும் என அறிவித்துள்ளது. 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உலகின் 3வது இடத்தை பிடிக்கும் வேளையில், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் ஜிடிபி 500 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருவிரு மாநிலங்கள் மட்டுமே 1 டிரில்லியன் டாலர் பங்கீட்டை பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 2027ல் இந்தியாவில் பல மாநிலங்களின் ஜிடிபி, வியட்நாம், நார்வே போன்ற பல நாடுகளின் ஜிடிபி-யை காட்டிலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் SBI Ecowrap தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் பெரும் பங்கீட்டை கொண்டு இருக்கும் தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு வேகமாக வளரும் மாநிலங்களும் GSDP தரவில் முன்னோடியாக இருக்கும் வேளையில் 500 பில்லியன் மதிப்பீட்டை முதலில் அடைவது உத்தரபிரதேசமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 வருடமாக தமிழ்நாட்டை போலவே உத்தர பிரதேசமும் 1 டிரில்லியன் டாலர் கனவுடன் இயங்கி வருகிறது, இதற்கு ஏற்றார் போல் பல நிறுவனங்கள் உத்தர பிரதேசத்தில் முதலீடு செய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்திற்கு மத்தியில் பெரும் போட்டி இருந்த நிலையில் SBI Ecowrap ஆய்வுகள் 2027 ஆம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசம் 500 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடையும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு 2030க்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications