தெருவோரக்கடை நடத்தி அதன் மூலம் லட்சங்களில் சம்பாதிப்பவர்களின் கதைகள் குறித்து கேட்டிருப்போம். அதற்கு உதாரணமாக இன்றும் ஒரு வடா பாவ் விற்பனையாளரை பற்றி தான் பார்க்க உள்ளோம். மும்பையைச் சேர்ந்த தெருவோர விற்பனையாளர்கள் பொறியியல் படிப்புகள் அல்லது MBA போன்ற பட்டப்படிப்புகளுடன் தள்ளுவண்டி கடையை நடத்தி அதன் மூலம் நல்ல வருமானத்தை பெறுகின்றனர். அதேபோல மும்பையை சேர்ந்த ஒரு வடா பாவ் வியாபாரி ஆண்டுக்கு 24 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அவருடைய சுவாரசியக் கதை குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சர்தக் சச்தேவா என்ற வீலாகர் வெளியிட்ட வைரல் வீடியோ இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் வடா பாவ் விற்பனை செய்து எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை அந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. சச்தேவா ஒரு உள்ளூர் வடா பாவ் கடையில் ஒரு நாள் வேலை செய்யும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதன் முடிவுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் அந்த வடா பாவ் விற்பனையாளரின் ஒரு நாள் வருமானம் பலரும் நினைப்பதை விட அதிகமாக உள்ளது.

சர்தக் சச்தேவாவின் வீடியோ 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. மேலும் அந்த வீலாகர் ஒருநாள் செலவழித்த தனது அனுபவத்தை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து பதிவிட்டுள்ளார். வீடியோவில் அவர் புதிய வடா பாவ்களை தயாரிப்பது, வாடிக்கையாளர்களுடன் உரையாடுவது என அனைத்தையும் படம் பிடித்துள்ளார். அதில் அவர் காலை முடிவதற்குள் சுமார் 200 வடா பாவ்களை விற்று விட்டோம் என்றும் குறிப்பிடுகிறார். இப்படியே மொத்தம் 622 வடா பாவ்கள் விற்பனையானதும் நமக்கு தெரிய வருகிறது. ஒவ்வொரு வடா பாவ்வின் விலையும் 15 ரூபாய். ஆக அன்றைய மொத்த வருமானம் 9,300 என்பதும் விடீயோவின் மூலம் நமக்கு தெரியவருகிறது.
ஒரு நாளைக்கு 9,300 ரூபாய் எனில் மாதம் முழுவதும் வடா பாவ் விற்பனை செய்தால் 2.8 லட்சம் ரூபாயை சம்பாதிக்கலாம். அதாவது இது சுமார் 3300 டாலர்கள். மற்ற செலவுகளை எல்லாம் கழித்த பின்னர் அந்த வடா பாவ் விற்பனையாளர் மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் அல்லது ஒரு ஆண்டுக்கு 24 லட்சம் வரை வருமானம் பெற முடியும். இந்த வருமானம் இந்தியாவில் பிற நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் சம்பளத்தை விட மிக அதிகம், இந்த வீடியோவை சச்தேவா பகிர்ந்ததிலிருந்து நெட்டிசன்கள் பலவகையான கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் "இந்தப் பணம் எளிதாக வருவது போல தெரிகிறது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் தீவிர உழைப்பு யாருக்கும் தெரிவதில்லை என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர் "இதுதான் இந்தியாவின் கல்வி முறையை வெற்றிகரமாக வறுத்து எடுப்பது" என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார். மூன்றாவது ஒரு நபர் 90 சதவீத பட்டாதாரிகளுக்கு மேல் இவர் சம்பாதிக்கிறார் என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர் "இந்த அண்ணன் என் வேலையை விட்டுவிட தூண்டுகிறார்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications