வாஷிங்டன், அமெரிக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலன் மஸ்க். மின்சார கார், விண்வெளி தொழில்நுட்பம், சமூக ஊடகம் என பல துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வருகிறார் எலான் மஸ்க். இவருடைய நிதியை கையாளும் பொறுப்பில் இருப்பவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பட்டய கணக்காளர். அதுமட்டுமின்றி எலான் மஸ்க் புதிதாக தொடங்கியுள்ள கட்சியின் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
யார் இந்த வைபவ் தனேஜா: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பட்டயக் கணக்காளர் வைபவ் தனேஜா தான் எலான் மாஸ்கின் செல்வத்தை கட்டி காப்பவர் என கூறலாம். தற்போது டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இவர் செயல்பட்டு வருகிறார் .இவருக்கு கூடுதலாக எலான் மஸ்க் தொடங்கி இருக்கக்கூடிய அமெரிக்க கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்கின் நம்பிக்கை நாயகன்: எலான் மஸ்கின் அமெரிக்க கட்சியில் வைபவ் தனேஜா பொருளாளராகவும் ஆவண காப்பாளராகவும் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த கட்சிக்கு வரக்கூடிய நிதிகள் ,அதனை பிரித்து பட்ஜெட் போட்டு ஒதுக்கீடு செய்வது, நிதி சட்டங்களுக்கு உட்பட்டு கட்சி இயங்குவதை உறுதி செய்வது உள்ளிட்ட பொறுப்புகள் இவர் வசம் இருக்கின்றன. இதன் மூலம் கார்ப்பரேட் பைனான்ஸில் இருந்து அரசியல் தளத்தை நோக்கி வந்திருக்கிறார்.
அரசியல் கட்சி பொருளாளர்: எலான் மஸ்க் தன்னுடைய கனவு நிறுவனமான டெஸ்லாவின் நிதி மட்டுமின்றி அரசியல் கட்சியின் நிதியை கவனிக்கும் பொறுப்பையும் அவருக்கு வழங்கியிருக்கிறார். இந்தியாவில் டெல்லியை பூர்வீகமாக கொண்டவர்தான் வைபவ் தனேஜா. 1999 ஆம் ஆண்டு காமர்ஸ் பிரிவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை முடித்தார். பின்னர் பட்டய கணக்காளராக தேர்ச்சி பெற்றார். 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர் சர்டிபிகேட் பப்ளிக் அக்கவுண்டன்ட் என்ற சான்றிதழ் பெற்ற பொதுக்கணக்காளர் பட்டத்தை பெற்றார்.

டெல்லியில் பயின்றவர்: அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களுக்கும் நிதி சார்ந்த சேவைகளை இவர் வழங்கி வந்தார். PricewaterhouseCoopers என்ற நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். கிட்டதட்ட 17 ஆண்டுகள் அங்கே பணி புரிந்த அவர் பின்னர் சோலார் சிட்டி என்ற நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 2017 ஆம் ஆண்டு தனேஜா டெஸ்லா நிறுவனத்தில் இணைந்தார் .
1157 கோடி ரூபாய் சம்பளம்: தனேஜாவின் திறமையை பார்த்து 2023ஆம் ஆண்டு இவருக்கு தலைமை நிதி அதிகாரி பொறுப்பினை வழங்கினார் எலான் மஸ்க். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இவர் 1157 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறார். இவருடைய சம்பளத்தில் பெரும்பாலான தொகை டெஸ்லா நிறுவன பங்குகளில் இருந்து மட்டுமே வந்தது. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான இயக்குனராகவும் அவர் பதவியை வகித்து வருகிறார். இந்தியாவில் டெஸ்லா தொழில் புரிவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். தற்போது எலான் மஸ்கின் கட்சியிலும் இவருக்கு பொறுப்பு கிடைத்திருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications