நாடு முழுவதும் மக்களிடையே வந்த பாரத் ரயில்களுக்கு சிறந்த வரவேற்பு இருக்கிறது. வழக்கமாக நாம் செல்லும் நகரங்களுக்கு குறைந்த பயண நேரத்திலேயே சென்று விடலாம் என்பதால் ஏராளமான மக்கள் வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்வதற்கு முன் வருகிறார்கள்.
அந்த வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் ரயிலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் கட்டணங்கள் என்ன என்ற விவரங்களை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரிய நகரங்களை எல்லாம் இணைக்கக் கூடிய வகையில் 170க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்திலும் நெல்லை, கோவை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் படுக்கை வசதி கிடைத்தால் நன்றாக இருக்கும், வயதானவர்கள் இன்னும் சவுகரியமாக பயணிக்கலாம் என்ற கோரிக்கைகளை எல்லாம் பரிசீலனை செய்து தான் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் ரயில் அஸ்ஸாமின் கவுகாத்தி மற்றும் மேற்குவங்கத்தின் கொல்கத்தா இடையே இயக்கப்பட இருக்கிறது. இதனை பிரதமர் மோடி வரும் 17ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் ஸ்லீப்பர் ரயில்களுக்கான கட்டண விவரங்கள் குறித்த தகவல்களை ரயில்வே வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் ஆர்ஏசி எனப்படும் பகுதியளவு இருக்கை உறுதியான டிக்கெட் வசதி இருக்காது, அதேபோல வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலும் இருக்காது. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 958 கிலோமீட்டர் தூரம் இயக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி வகுப்பு 2,299 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு 2,97ஒ ரூபாயும், முதல் வகுப்பு ஏசி வகுப்புக்கு 3,640 ரூபாயும் டிக்கெட் கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டிக்கெட்டுக்கும் ஐந்து சதவீத ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.
குறைந்தபட்சம் 400 கிலோமீட்டர் வரையிலான ஏசி முதல் வகுப்பின் டிக்கெட்டுக்கு 1,520 ரூபாய், ஏசி இரண்டாம் வகுப்புக்கு 1240 ரூபாய், ஏசி மூன்றாம் வகுப்புக்கு 960 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் குறைந்தபட்ச கட்டணம் 960 ரூபாயாக இருக்கும். பயணம் செய்ய உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் அனுமதிக்கப்படுவார்கள்.
அப்படி என்றால் காத்திருப்பு பட்டியல் மற்றும் ஆர்ஏசி டிக்கெட்டுகள் இந்த ரயிலில் வழங்கப்படாது. முன்பதிவு காலம் தொடங்கும் போது அனைத்து படுக்கை வசதிகளும் அனைத்து பயணிகளுக்கு கிடைக்கும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கான டியூட்டி பாஸ் ஆகி ஒதுக்கீடுகள் நடைமுறையில் இருக்கும், வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications