பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் 2017ல் தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் நாட்டின் முதல் அதிவேக ரயில் பாதைக்கான பணிகள் மந்தகதியில் நடந்தது. இருப்பினும் தற்போது ரயில் பாதை அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 2026ம் ஆகஸ்ட் மாதத்துக்குள் சூரத்-பிலிமோரா இடையே புல்லட் ரயில்களை இயக்க ஜப்பானை சேர்ந்த ஷின்கான்சென் சிஸ்டம் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.
ஆனால் அது சாத்தியமில்லை மற்றும் மேலும் காலம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2030ம் ஆண்டுக்கு முன்னதாக அந்த பாதையில் புல்லட் ரயில்களை இயக்க வாய்ப்பில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜப்பானிய ஷின்கான்சென் புல்லட் ரயில்களை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 2033ம் ஆண்டில்தான் இந்த அதிவேக ரயில் பாதையில் முழு அளவில் புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் ரயில்களை இயக்க தாமதமாகும் என்பதால் அதுவரை, முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பை (ரயில் பாதை) பயன்படுத்தும் நோக்கில் புதிய ஐடியாவை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

முதலில் இந்த அதிவேக ரயில் பாதையில் வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்லட் ரயிலுக்காக அதிவேக ரயில் பாதையில் முதலில் ஜப்பானின் டிஎஸ்-எடிசி சிக்னல் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அண்மையில் இந்த பாதையில் வந்தே பாரத் ரயில்களுக்கு இணக்கமான ஐரோப்பிய சிக்னல் அமைப்பதற்கான (இடிசிஎஸ்-2 சிக்னலிங்) ஏலத்தை வெளியிட்டது. ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் ஏழு வருட ஒப்பந்த காலத்தில் இடிசிஎஸ்-2 சிக்னலிங் மற்றும் ரயில் கட்டுபாட்டு அமைப்பை வடிவமைத்து தயாரித்து வழங்கும், நிறுவுதல் மற்றும் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளும்.
ரயில்வே அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை அதிவேக ரயில் பாதை திட்டத்தின் உத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உறுதி செய்வது போல் உள்ளது. மேலும், தற்போது ஜப்பானிய ரயில்கள் இல்லை என்பதால், அதிக மூலதனம் தேவைப்படும் இந்த திட்டத்தை பயன்படுத்தாமல் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
2027ம் ஆண்டுக்குள் இந்த பாதையில் வணிக ரீதியாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆக, புல்லட் ரயில் பாதையில் முதலில் வந்தே பாரத் ரயில்தான் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷின்கான்சென் ரயில்கள் அறிமுகப்படுத்தும் வரை இந்த பாதையில் இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் இடைக்கால தீர்வாக இயங்கும். ஷின்கான்சென் ரயில்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தவுடன், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் இடிசிஎஸ்-2 அமைப்பு மற்ற அதிவேக ரயில் திட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்தப்படும் என தகவல்.
Story written by: Subramanian
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications