கோவிட் நோயால் தனது பெற்றோர் இருவரையும் இழந்த சில மாதங்களுக்குள் பத்தாம் வகுப்பில் 99.8% மதிப்பெண்கள் பெற்று போபால் மாநிலத்தின் டாப்பர் என்ற பெயர் வாங்கிய வனிஷா பதக் என்ற மாணவி, இப்போது சொந்த வீட்டில் இருந்த வெளியேற வேண்டிய நிலை உருவாகியது மட்டும் அல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் நிலையும் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் இப்பிரச்சனையில் தலையிட்டு உள்ளார்.
வனிஷா பதக்
வனிஷா பதக்-ன் தந்தை ஜீதேந்திர பதக் எல்ஐசி முகவர், சொந்த வீடு வாங்குவதற்காக எல்ஐசி அலுவலகத்தில் கடன் வாங்கியிருந்தார். வனிஷா மைனர் என்பதால், எல்.ஐ.சி. நிர்வாகம் ஜீதேந்திர பதக்-ன் சேமிப்பையும், மாதந்தோறும் அவருக்குக் கிடைக்கும் கமிஷன்களையும் முடக்கிவிட்டது.
எல்.ஐ.சி
வனிஷா தனக்கு 17 வயது மட்டுமே ஆனதாகவும், உடன் இருக்கும் சகோதரரை-ஐ பார்த்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி இருப்பதால் கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் அளிக்குமாறு எல்ஐசி அதிகாரிகளுக்குப் பலமுறை கடிதம் எழுதியுள்ளார், ஆனால் மறுமுனையில் எவ்விதமான பதிலும் அளிக்கப்படாமல் இருந்தது.
எல்ஐசி சென்டர்ல் அலுவலகம்
வனிஷாவுக்கு 18 வயது வரை எந்த நோட்டீஸ்-ம் வராது என்று எல்ஐசி அதிகாரி கூறும் நிலையில், எல்ஐசி அலுவலகம் வழக்கம் போல் ஜீதேந்திர பதக் மற்றும் வனிஷா பதக்-ன் விண்ணப்பத்தை எல்ஐசி சென்டர்ல் அலுவலகத்திற்கு அனுப்பியது.
லீகல் நோட்டீல்
இதைத் தொடர்ந்து வனிஷா பதக் எல்ஐசி நிறுவனத்திடம் இருந்து லீகல் நோட்டீல் பெற்றுள்ளார். இதில் தனது தந்தை வாங்கிய ஹோம் லோனுக்கான கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் இல்லையெனில் வழக்கை சந்திக்கத் தயாராகுங்கள் எனப் பிப்ரவரி 2ஆம் தேதி நோட்டீஸ் பெற்றுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
சுமார் 29 லட்சம் ரூபாய் கடனை 10வது படித்த பெண் எப்படிச் செலுத்த முடியும், இந்த நிலையில் இச்செய்தி இந்தியா முழுவதும் வைரல் ஆன நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் மத்திய நிதியமைச்சகத்தையும், எல்ஐசி நிறுவனத்தை டேக் செய்து இக்கணக்கில் தற்போதைய நிலை என்ன என்று கேட்டுள்ளார்.