கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வந்த நிலையில், கர்நாடகாவில் தற்போது அடுத்தடுத்து இரண்டு பெரிய முதலீடுகள் செமிகண்டக்டர் சிப் துறையில் குவிந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் இதேவேளையில் செமிகண்டக்டர் சிப் உற்பத்திக்கும், செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் 2வது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
செமிகண்டக்டர் சிப்
செமிகண்டக்டர் சிப் பிரிவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட வேதாந்தா குழுமம் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கர்நாடகாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி
கடந்த ஒரு மாதமாக வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்து வந்த நிலையில் கர்நாடகாவை தேர்வு செய்து அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை செய்து வந்த நிலையில் incentives குறித்த ஆலோசனையில் தற்போது பேச்சுவார்த்தை நிற்கிறது.
20 பில்லியன் டாலர்
அனில் அகர்வால் கட்டுப்பாட்டில் உள்ள வேதாந்தா குழுமம் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் கூட்டணியில் உருவாகும் இந்தச் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலைக்காகச் சுமார் 20 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது.
4 பில்லியன் டாலர் ஊக்கத்தொகை
இந்நிலையில் முதலீட்டு மதிப்பில் 20% அதாவது 4 பில்லியன் டாலர் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வடிவில் திரும்ப வேண்டும் என்று வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு தற்போது 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சலுகையாக அளிக்க வேண்டுமா என்பது தான் தற்போதைய பிரச்சனை.
கர்நாடக அரசு
வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி தொழிற்சாலையை அமைக்க பொருத்தமான இடத்தைக் கண்டறிந்து, போதுமான தண்ணீர், நிலையான மின்சார விநியோகம் மற்றும் திட்டத்தை விரைவாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க உதவுவதாகக் கர்நாடக அரசு உறுதியளித்துள்ளது.
ISMC அனலாக் பேப்
மே மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டை அடிப்படையாகக் கொண்ட ISMC அனலாக் பேப் (ISMC Analog Fab) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கர்நாடகாவில் புதிய செமிகண்டக்டர் சிப் தயாரிப்புத் தளத்தை அமைக்க அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ISMC சுமார் 22900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணியின் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை 2வதாகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications