எல்லோரும் சம்மதம் சொல்லிட்டாங்களாம்.. 5 நிறுவனங்களாக பிரியும் வேதாந்தா.. 1 இருந்தால் 4 பங்கு உறுதி...

கோடீஸ்வரர் அனில் அகர்வால் கட்டுப்பாட்டில் உள்ள வேதாந்தா நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமாகும். வேதாந்தா அலுமினியம், ஆயில் மற்றும் கேஸ், மின்சாரம் மற்றும் ஸ்டீல் உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது நிர்வாகத்தை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில், உற்பத்தி செய்யும் உலோகங்களின் அடிப்படையில் நிறுவனத்தை தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், நிறுவனத்தை 5 நிறுவனங்களாக பிரிக்க பங்குதாரர்கள், கடன் வழங்கியவர்களிடம் (பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன் வழங்கியவர்கள்) இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவன பிரிப்புக்கு பங்குதாரர்களில் 99.99 சதவீத பேரும், பாதுகாப்பான கடன் வழங்கியவர்களில் 99.99 சதவீத பேரும், பாதுகாப்பற்ற கடன் வழங்கியவர்களில் 99.95 சதவீத பேரும் ஆதரவாக வாக்களித்ததாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்புதல், வேதாந்தா நிறுவனத்தை தனது வணிகங்களை அலுமினியம், எண்ணெய் மற்றும் கேஸ், மின்சாரம், ஸ்டீல் என தனித்தனி நிறுவனங்களாக பிரித்து பட்டியலிட அனுமதிக்கும்.

எல்லோரும் சம்மதம் சொல்லிட்டாங்களாம்.. 5 நிறுவனங்களாக பிரியும் வேதாந்தா.. 1 இருந்தால் 4 பங்கு உறுதி

நிறுவன பிரித்தலில் உருவாக்கப்படும் நிறுவனங்கள், வேதாந்தா அலுமினியம், வேதாந்தா ஆயில் அண்ட் கேஸ்,வேதாந்தா பவர், வேதாந்தா இரும்பு அண்ட் ஸ்டீல் மற்றும் வேதாந்தா லிமிடெட் என 5 நிறுவனங்களாக செயல்படும். இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் வேதாந்தா லிமிடெட்டுடன் இணைக்கப்படும். மேலும் புதிய வணிகங்களுக்கான காப்பகமாகவும் வேதாந்தா லிமிடெட் இருக்கும். வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தற்போது பங்குச் சந்தையில் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் பிரித்தல் திட்டத்தின்படி, பிரித்தல் செயல்முறை முடிந்ததும், ஒவ்வொரு வேதாந்தா பங்குதாரரும் அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் புதிதாக பிரிக்கப்பட்ட 4 நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் கூடுதலாக 1 பங்கை பெறுவார்கள். வேதாந்தா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடெட் தொடா்ந்து ஹோல்டிங் நிறுவனமாகவே இருக்கும். நிறுவன பிரிப்பு எதிரொலியாக இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே வேதாந்தா நிறுவன பங்கின் விலை 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.438.95ஆக இருந்தது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+