இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகிய வேதாந்தா நிறுவனம் தனது ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து காலி செய்தது என்பது தெரிந்தது.
இதனை அடுத்து மற்ற மாநிலங்களில் புதுப்புது தொழிற்சாலைகளை நிறுவி வருகிறது.
அந்த வகையில் குஜராத்தில் வேதாந்தா நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து 20 பில்லியன் டாலர் மதிப்பில் செமிகண்டக்டர் ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
வேதாந்தா லிமிடெட் நிறுவனம்
வேதாந்தா லிமிடெட் நிறுவனம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. தைவானின் ஃபாக்ஸ்கான் உடன் இணைந்து 20 பில்லியன் டாலர் மதிப்பில் ன் இந்த ஆலையை தொடங்கவுள்ளது.
செமிகண்டக்டர் ஆலை
வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலைகளை உருவாக்க மூலதனச் செலவு, மலிவான மின்சாரம், நிதி மற்றும் நிதி அல்லாத மானியங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அகமதாபாத்
இந்தத் திட்டமானது குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத் அருகே அமைக்கப்பட இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்திடம் கேட்கும் சலுகைகள்
செமிகண்டக்டர் ஆலையை தொடங்குவதற்காக வேதாந்தா நிறுவனம் 99 ஆண்டு குத்தகைக்கு 1,000 ஏக்கர் நிலம், 20 ஆண்டுகளுக்கு சலுகை விலையில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை கோரியிருப்பதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கோரிக்கைகளுக்கு குஜராத் அரசு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வேதாந்தா பதிலளிக்க மறுப்பு
ஆனால் இந்த செய்தி குறித்து வேதாந்தாவின் செய்தி தொடர்பாளர் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தினர் பதிலளிக்கவில்லை. அதேபோல் குஜராத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரியும், முதல்வர் பூபேந்திரபாய் படேலின் அலுவலகத்தில் உள்ள மற்றொரு அதிகாரியும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications