மும்பை: தூத்துக்குடியில் இருந்து வெளியேறிய வேதாந்தா நிறுவனம் குஜராத் அரசுடன் இணைந்து, குஜராத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியில் ஈடுபடவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்தது.
தற்போது ஓடிசாவில் புதியதாக 25,000 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 80,000 கோடி ரூபாய் முதலீட்டினை கொண்டுள்ள வேதாந்தா, மீண்டும் அம்மாநிலத்தில் அலுமினியம் மற்றும் ஃபெரோக்ரோம் மற்றும் சுரங்க வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு இந்த முதலீட்டினை அறிவித்துள்ளது.
ஜிடிபியில் முக்கிய பங்கு
வேதாந்தாவின் முதலீடு மற்றும் செயல்பாட்டின் மூலம் ஒடிசாவின் ஜிடிபி-யில் நேரடியாக கிட்டதட்ட 4% பங்கு வகிக்கும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினையும் பெறுவர்.
பல லட்சம் பேருக்கு வாய்ப்பு
ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், வேதாந்தாவின் தலைவர் அனில் அகர்வாலுடன் மும்பையில் நடந்த மேக் இன் ஓடிசா 2022 கூட்டம் நடந்தது. வேதாந்தா நிறுவனம் பல நூற்றுக்கணக்கான எம் எஸ் எம் இ-களுக்கு வாழ்வளித்து வருகின்றது. 5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அகர்வாலை மேற்கோள் காட்டி சுட்டி காட்டியுள்ளது.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் மிக சாதகமான முதலீட்டு தளங்களில் ஓடிசாவும் ஒன்று. அரசின் நிலையான தொலை நோக்கு பர்வையால் வழி நடத்தப்படுகிறது. இம்மாநிலம் ஈஸி ஆஃப் டூயிங்க் லிஸ்டிலும் இடம் பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தான் நிறுவனம் மேற்கொண்டு 25,000 கோடி ரூபாயினை மேற்கொண்டு ஒடிசாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என வேதாந்தா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குஜராத் நிலவரம்
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு தான் வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்ய தேர்வு செய்துள்ளது. இதற்காக குஜராத் அரசுடன் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications