வேதாந்தா லிமிடெட் பங்குகள் தொடர்ந்து 8 வர்த்தக நாளாக தொடர்ந்து சரிவுடனே உள்ளது, பிப்ரவரி 28 அன்று இந்நிறுவனத்தின் 2-பில்லியன் டாலர் நிதி திரட்டல் வரவிருக்கும் வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை சரிந்தது. பிப்ரவர் 28 ஆம் தேதி வர்த்தகத்தில் வேதாந்தா லிமிடெட் பங்குகள் அதிகப்படியாக 262 ரூபாய் வரையில் சரிந்தது.
வேதாந்தா லிமிடெட் கட்டாயம் நிதிதிரட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் முக்கியமான வர்த்தகத்தையும், நிறுவனத்தையும் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.
இதற்கான முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ் அண்ட் பி குளோபல்
எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா ரிசோர்ஸ் விரைவில் 2 பில்லியன் டாலர் அளவிலான கடனை திரட்ட வேண்டும், இல்லையெனில் வேதாந்தா ரிசோர்ஸ்-ன் ஜிங்க் உலோகத்தின் சர்வதேச சொத்துக்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்க வேண்டும்.
புதிய திட்டங்கள்
இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் இல்லையெனில் வேதாந்தா ரிசோர்ஸ்-ன் கிரெடிட் ரேட்டிங் பெரும் சரிவை எதிர்கொள்ளும். இதன் மூலம் வேதாந்தா குழுமத்தின் அடுத்தடுத்து திட்டமிட்டு இருக்கும் புதிய திட்டங்கள் அனைத்தும் முடக்கத்தை எதிர்கொள்ளும் என அறிவித்துள்ளது எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்.
ஹிந்துஸ்தான் ஜிங்க்
இதேவேளையில் மத்திய அரசு வேதாந்தா ரிசோர்ஸ்-ன் ஜிங்க் உலோகத்தின் சர்வதேச சொத்துக்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு 3 பில்லியன் டாலருக்கு விற்கும் திட்டத்தை ஏற்கவில்லை. 20 வருடத்திற்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசு 29.54 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
ஈவுத்தொகை
ஜனவரி மாதம் வேதாந்தா குழுமம் ஈவுத்தொகையை வெளியிட்டதன் மூலம் மார்ச் 2023 வரையில் வேதாந்தா ரிசோர்ஸ் போதுமான நிதி ஆதாரத்தை கொண்டு உள்ளது. இதேபோல் வேதாந்தா லிமிடெட் ஜூலை முதல் செப்டம்பர் வரையில் 15 மில்லியன் டாலர் அளவிலான கடன்கள் முதிர்வடைகிறது. இந்த நிலையில் கடன் அடைக்கவும், நிறுவனத்தை நடத்தவும் ஜூன் மாதத்திற்குள் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகை அவசியமாக உள்ளது.
கடன் முதிர்வு
ஆனால் வேதாந்தா ரிசோர்ஸ் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான இன்டர் கம்பெனி கடன்களையும்,350 மில்லியன் டாலர் கடனை இரு வங்கிகளுக்கு இதே ஜூலை முதல் செப்டம்பர் வரையில் செலுத்த வேண்டும். இதனால் கட்டாயம் வேதாந்தா குழுமம் குறைந்த பட்சம் 500 மில்லியன் டாலர் அளவிலான கடனை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வேதாந்தா லிமிடெட் பங்குகள்
இந்த நிலையில் தான் செவ்வாய்க்கிழமை காலை 11.20 மணிக்கு 8.82 சதவீதத்திற்கும் மேலாக வேதாந்தா லிமிடெட் பங்குகள் சரிந்தது, இது செப்டம்பர் 16, 2022 க்குப் பிறகு ஐந்து மாதங்களில் எப்போதும் இல்லாத சரிவாகும் இன்றைய வர்த்தகத்தில் 262 ரூபாய் வரையில் சரிந்தது.
8 நாள் தொடர் சரிவு
கடந்த 8 வர்த்தக நாளில் மட்டும் வேதாந்தா லிமிடெட் பங்குகள் 15 சதவீதம் சரிந்தது. 2023 ஆம் ஆண்டில் இதுவரையில் 15.19 சதவீதம் வரையில் பங்கு விலை குறைந்துள்ளது, இதில் பிப்ரவரி மாதம் மட்டுமே 18.26 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி வர்த்தக முடிவில் 6.58 சதவீதம் சரிந்து 268.45 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications