385 பேர் பணி நீக்கம்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்.. வேதாந்து அதிரடி முடிவு!

இந்தியாவின் எட்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 7000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போதும் இந்த பணி நீக்கமானது தொடர்ந்து கொண்டுள்ளது. இது கொரோனாவுக்கு பிறகு ஆன்லைன் கல்வி தேவையானது கணிசமாக அதிகரித்த நிலையில், சமீபத்திய காலாண்டுகளாக குறைந்துள்ளது.

இதனால் எட்டெக் ஸ்டார்ட் அப்களில் முதலீடுகள் குறைந்துள்ளது. இதற்கிடையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடுத்தடுத்த செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

பணி நீக்கம்

பணி நீக்கம்

டைகர் குளோபல் பின்னணியில் உள்ள வேதாந்து இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் கொரோனாவுக்கு பிறகு, வளர்ச்சியினை அதிகரிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றது. எனினும் தேவை சரிவானது இருந்து வரும் நிலையில், செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்துள்ளது. இந்த செலவின் குறைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது.

எத்தனை பேர் பணி நீக்கம்

எத்தனை பேர் பணி நீக்கம்

பெங்களூரு அடிப்படையிலான வேதாந்து நிறுவனம் அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 11.6% அல்லது 385 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதற்கான இழப்பீடினையும் அறிவித்துள்ளது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, அவர்களுக்கான அடுத்த கட்ட வேலையினை தேட பயனுள்ளதாக இருக்கும் என அறிவித்துள்ளது.

எந்தெந்த பிரிவில் பணி நீக்கம்?

எந்தெந்த பிரிவில் பணி நீக்கம்?

தற்போது இந்த நிறுவனத்தில் 3300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். வேதாந்துவின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் ஹெச் ஆர் மற்றும் விற்பனை பிரிவு, கற்றல் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பல கட்டங்களாக பணி நீக்கம்

பல கட்டங்களாக பணி நீக்கம்

ஒட்டுமொத்த எட்டெக் யூனிகார்ன் நிறுவனம் பல கட்டமாக பணி நீக்கம் செய்து வருகின்றது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. கடந்த மே மாதம் 424 பேரை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 100 பேரை பணி நீக்கம் செய்தது. தற்போது கிட்டதட்ட 400 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

 50% பணி நீக்கம்

50% பணி நீக்கம்

இந்த எட்டெக் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள்உட்பட கடந்த மே மாதத்தில் 5600 பேராக இருந்தது. இது தற்போது 3300 பேராக குறைந்துள்ளது. இதன் அதன் லாபத்தினை அதிகரிக்க செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. அதன் செலவு குறைப்பு நடவடிக்கையில் 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

பைஜூ & அன்அகாடமி

பைஜூ & அன்அகாடமி

பைஜூ நிறுவனமும் சுமார் 2500 ஊழியர்களை பணி நீய்க்கம் செய்தது. இந்த நிறுவனம் மார்ச் 2023ல் பணி நீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மற்றொரு எட்டெக் நிறுவனமான அன்அகாடமி 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. பைஜூ நிறுவனமும் பல கட்டமாக பணி நீக்க நடவடிக்கையினை எடுத்தது.

பணி நீக்கம் தொடரலாம்

பணி நீக்கம் தொடரலாம்

மேற்கண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தவிர ஃபிரன்ட்லோ, லீட், டாப்பர், ஒயிட் ஹட் Jr, சூப்பர்லேர்ன் மற்றும் Eruditus, உள்ளிட்ட எட் டெக் நிறுவனங்களும்ன் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது. இதே அமேசானின் எட் டெக் பிரிவு வணிகத்தினை முழுமையாக நிறுத்தியுள்ளது. இந்த போக்கானது இன்னும் சில காலம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+