தமர் நரேந்திர மோடி அரசின் விவசாய கொள்கைளை எதிர்த்தும், திரும்பப் பெற கோரியும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கடந்த 7 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் தற்போது அறிவித்துள்ள மூன்று புதிய விவசாயச் சட்டங்களால் தங்களுக்கு அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகளவிலான பயன் உள்ளது என்பது விவசாயிகளின் கருத்து. இதன் காரணமாகவே புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து, திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லி கடும் குளிரையும் பொருட்படுத்தாமலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் காய்கறிகளின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.
விநியோகம் தடை
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநில விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாகச் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய உற்பத்தி பொருட்களின் வரவு மற்றும் விநியோகம் தடைப்பட்டுக் காய்கறிகளின் விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.
மொத்த விலை
காய்கறிகள் மற்றும் இதர விவசாய உற்பத்தி பொருட்களின் விநியோகம் தடைப்பட்டுள்ள காரணத்தால் காய்கறிகளின் மொத்த விலையில் 50 முதல் 100 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது என டெல்லி காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய வழித்தடம்
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநில விவசாயிகளின் போராட்டத்தால் சிங்கூ மற்றும் டிகிரி எல்லை போக்குவரத்துப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து வரும் காய்கறிகளின் வரவு பாதிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் வரவு
இந்நிலையில் டெல்லி காய்கறி வியாபாரிகள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்கள் அல்லாமல் வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகளை வாங்கத் துவங்கியுள்ள காரணத்தால் நேற்று முதல் மக்களுக்குத் போதுமான காய்கறிகள் தேவையான அளவிற்கு கிடைத்து வருவதாக டெல்லி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள்
டெல்லி விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி மக்களாகிய உங்களின் கருத்து என்ன..? கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.