இந்தியாவில் அனைத்து பொருட்களின் விலையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், சாமானிய மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதிப்பது காய்கறி மற்றும் பழங்களின் விலை தான்.
நாட்டின் பல பகுதிகளில் காய்கறி மற்றும் பழங்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் நடுத்தரக் குடும்பங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லி மற்றும் என்சிஆர்
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், மக்கள் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை மக்களை அதிகளவில் பாதிக்கிறது.
நொய்டா
நொய்டாவில் சஃபல் ஸ்டோர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் விலை அதிகமாக உள்ளது. ரீடைல் விற்பனையாளர்களும் தங்களுக்கு அதிகப்படியான தொகையில் தான் கிடைப்பதாகக் கூறுகின்றனர், இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விலை நிலவரம்
டெல்லி, நொய்டா மற்றும் என்சிஆர் பகுதிகளில் தற்போது உருளைக்கிழங்கு கிலோ ரூ.18-22க்கும், காலிபிளவர் கிலோ ரூ.98க்கும், கத்திரிக்காய் கிலோ ரூ.45க்கும், தக்காளி கிலோ ரூ.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது இது சஃபல் ஸ்டோர்களில் இருக்கும் விலை.
ரீடைல் கடைகள்
இதுவே ரீடைல் கடைகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.25-30, காலிஃபிளவர் கிலோ ரூ.100, கத்திரிக்காய் கிலோ ரூ.80, தக்காளி ரூ.50 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஆன்லைனில் இதைவிடக் கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வுக்கான காரணம்
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளுக்குச் சாஹிபாபாத்தில் காய்கறிகள் பயிரிடப்பட்டுச் சப்ளை செய்யப்படுவதாகக் காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் அதிகப் போக்குவரத்துச் செலவு காரணமாகக் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications