சாமானியர்களை பந்தாடும் காய்கறி விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அனைத்து பொருட்களின் விலையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், சாமானிய மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதிப்பது காய்கறி மற்றும் பழங்களின் விலை தான்.

நாட்டின் பல பகுதிகளில் காய்கறி மற்றும் பழங்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் நடுத்தரக் குடும்பங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விரைவில் 81000 ரூபாய் டெப்பாசிட்.. EPFO அறிவிப்பு..! விரைவில் 81000 ரூபாய் டெப்பாசிட்.. EPFO அறிவிப்பு..!

டெல்லி மற்றும் என்சிஆர்

டெல்லி மற்றும் என்சிஆர்

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், மக்கள் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை மக்களை அதிகளவில் பாதிக்கிறது.

நொய்டா

நொய்டா

நொய்டாவில் சஃபல் ஸ்டோர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் விலை அதிகமாக உள்ளது. ரீடைல் விற்பனையாளர்களும் தங்களுக்கு அதிகப்படியான தொகையில் தான் கிடைப்பதாகக் கூறுகின்றனர், இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

விலை நிலவரம்

விலை நிலவரம்

டெல்லி, நொய்டா மற்றும் என்சிஆர் பகுதிகளில் தற்போது உருளைக்கிழங்கு கிலோ ரூ.18-22க்கும், காலிபிளவர் கிலோ ரூ.98க்கும், கத்திரிக்காய் கிலோ ரூ.45க்கும், தக்காளி கிலோ ரூ.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது இது சஃபல் ஸ்டோர்களில் இருக்கும் விலை.

ரீடைல் கடைகள்

ரீடைல் கடைகள்

இதுவே ரீடைல் கடைகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.25-30, காலிஃபிளவர் கிலோ ரூ.100, கத்திரிக்காய் கிலோ ரூ.80, தக்காளி ரூ.50 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஆன்லைனில் இதைவிடக் கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வுக்கான காரணம்

விலை உயர்வுக்கான காரணம்

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளுக்குச் சாஹிபாபாத்தில் காய்கறிகள் பயிரிடப்பட்டுச் சப்ளை செய்யப்படுவதாகக் காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் அதிகப் போக்குவரத்துச் செலவு காரணமாகக் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vegetables, fruit prices are high; Delhi, NCR, Noida people suffering lot

vegetables, fruit prices are high amid supply crunch due to rainfall and high transportation cost; Delhi, NCR, Noida people suffering lot
Story first published: Saturday, October 8, 2022, 20:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X