அக்டோபரில் புதிய சாதனை செய்த வாகன விற்பனை: எந்தெந்த நிறுவனங்களுக்கு லாபம்?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாடு மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் வாகன விற்பனையில் புதிய சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வாகன விற்பனை

வாகன விற்பனை

பயணிகள் பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு அக்டோபரில் உயர்ந்துள்ளதாக ஆட்டோ உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது முற்றிலும் நீங்கி விட்ட நிலையில் மீண்டும் வாகனங்களின் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அக்டோபரில் விற்பனை எவ்வளவு?

அக்டோபரில் விற்பனை எவ்வளவு?

அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது ஏராளமான கார்கள் விற்பனையாகியுள்ளது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் 3,75,000 முதல் 3,85,000 வாகனங்கள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் அதிகபட்சமாக 3,82,000 வாகனங்கள் விற்பனை ஆகி இந்த நிலையில் தற்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விற்பனையில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சேடன் கார்கள்

சேடன் கார்கள்

அக்டோபர் மாதத்தில் விற்பனையான மொத்த விற்பனையில் சேடன் கார்களின் விற்பனை மட்டுமே 25% என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் அதிக அளவு கார்களை விற்பனை செய்த நிறுவனங்களில் மாருதி சுசுகி முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மாருதி விற்பனை 44 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் ஒரு லட்சத்து 92 ஆயிரம் கார்கள் கடந்த மாதம் மட்டுமே விற்பனையாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

டாடா கார்கள்

டாடா கார்கள்

மாருதி நிறுவனத்தை அடுத்து டாடா, ஹோண்டா போன்ற நிறுவனங்களும் மிகப் பெரிய அளவில் விற்பனையில் சாதனை உள்ளது என்றும் டாடாவின் கார் விற்பனை அக்டோபர் மாதத்தில் 43 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருசக்கர வாகனங்கள்

இருசக்கர வாகனங்கள்

நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களும் இந்த பண்டிகை நேரத்தில் மிக அதிகமாக விற்பனையாகின்றன. குறிப்பாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் குஜராத், மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விற்பனை மிக அதிகமாக இருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விற்பனை சூடுபிடிக்குமா?

விற்பனை சூடுபிடிக்குமா?

அக்டோபர் மாதத்திற்கு பிறகு டிசம்பர் மற்றும் ஜனவரி மீண்டும் பண்டிகை காலம் வருவதால் வாகனங்களின் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+