இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்தது. இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்ய பொருளாதாரத்திற்கு வலு சேர்ப்பதாகவும் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதி அளிக்கிறது என்றும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக இந்தியாவை சாடி வந்தது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் இறக்குமதி வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இது இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக அமெரிக்க அரசு கூறி வந்தது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டோம் என வெளியிடவில்லை. ஆனால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் படிப்படியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டன.
இந்த சூழலில் தான் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது திடீரென ராணுவ நடவடிக்கை எடுத்தது. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்தது. இதனை அடுத்து வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் தங்களுக்கு சொந்தமானவை என அறிவித்த டிரம்ப் இனி இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டு வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என அறிவித்தார். அதே வேளையில் அமெரிக்க நிறுவனங்களின் மேற்பார்வையில் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான உரிமங்களையும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.
அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து வெனிசுலாவிலிருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் கூடிய மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் மீட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தற்போது மூன்று சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இவை தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணையை ஏற்றுக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. போக்குவரத்து செலவுகளை குறைக்கவும் விரைவாக எண்ணெய் வந்து இந்தியாவை சேர்வதையும் உறுதிப்படுத்தவும் இருப்பதிலேயே பெரிய சரக்கு கப்பல்கள் மூலம் எண்ணெய் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு வரை இந்தியா வெனிசுலாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கியது. வெனிசுலாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. ஆனால் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது பொருளாதார தடைகளை விதித்ததால் இந்தியா வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டது. அதே வேளையில் தான் ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கியதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் சென்றன.
More From GoodReturns

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு இல்லாமல் காக்கும் தென்னிந்தியா: பூமிக்கடியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம்

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!



Click it and Unblock the Notifications