அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை மாலை 3 மணிக்குப் பின் சக ஊழியர்களுடன் ஹேங்கவுட் செய்ய வலியுறுத்துவது மட்டும் அல்லாமல், பணத்தைக் கொடுத்து சரக்கு அடிக்க அனுமதிக்கிறது.
ஒவ்வொரு நிறுவனமும், ஊழியர்கள் மத்தியிலான நட்புறவை மேம்படுத்தவும், நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிக்கவும் பல முயற்சிகள் எடுத்து வருகிறது. முன்பெல்லாம் டீம் லன்ச் சென்றாலே பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

ஆனால் இது Gen Z காலம், இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதனால் நிறுவனங்கள் பல புதிய உக்திகளை கையாள துவங்கியுள்ளது.
இந்த வகையில் அமெரிக்காவின் கிளவுட் அடிப்படையிலான செக்யூரிட்டி நிறுவனமான வெர்கடா (Verkada) 3-3-3 பெர்க் என்று அழைக்கப்படும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள், நிறுவனத்தின் செலவில் மாலை 3 மணிக்குப் பிறகு உணவு மற்றும் மதுபானம் அருந்த வெளியே செல்லலாம். மேலும் ஒவ்வொரு பணியாளரும் 30 டாலர் வரையில் நிறுவன பணத்தைச் செலவழிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதுக்குறித்து Verkada நிறுவனத்தின் CFO, Kameron Rezai கூறுகையில், இந்த திட்டத்தை ஹோட்டல்களில் happy hours-ல் செய்ய முடிவு செய்துள்ளோம், இத்திட்டம் நிறுவன வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட இந்த கலிபோர்னியா Verkada நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தில் குறைந்தது 1,800 பேர், குறைந்தது ஒரு முறையாவது பங்கேற்றுள்ளனர்.
Verkada நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபிலிப் கலிஸ்ஸான் கூறுகையில், இத்திட்டம் மதியம் நேரத்தில் செயல்படுத்தப்படுவதால் ஊழியர்கள் நிறுவனம் அல்லது வேலை தொடர்பான ஏதாவது ஒன்றைப் பற்றி பேசுவார்கள், இறுதியில் அது எங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்தார்.
100 பில்லியன் டாலர் மதிப்புள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டிப்போட, இது போன்ற நடவடிக்கை ஒரு நிறுவனத்திற்கு முக்கியமானவை. இது ஊழியர்கள் மத்தியிலான உறவை பெரிய அளவில் மேம்படுத்தும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications