விரைவில் Harley Davidson பைக்குகளின் விலை குறையப் போகிறது!! மத்திய அரசின் அதிரடி திட்டம்!!

கூடிய விரைவில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) பைக்குகளின் விலை குறைய இருக்கிறது. இந்தியாவில் அதிக என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் பிரிவில் ராயல் என்ஃபீல்டு தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தங்களின் இருசக்கரவாகனங்களை இறக்குமதி செய்து ஹீரோ மோட்டார் நிறுவனம் மூலம் விற்பனை செய்கிறது. இருந்தாலும் இதன் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் இவற்றை வாங்க முன்வருவதில்லை. இறக்குமதி செய்து விற்கப்படுவதால் இதன் விலை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தான் மத்திய அரசு 750சிசி மற்றும் அதற்கு மேல் என்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான இறக்குமதி வரியை நீக்க திட்டமிட்டுள்ளது.

விரைவில் Harley Davidson பைக்குகளின் விலை குறையப் போகிறது!! மத்திய அரசின் அதிரடி திட்டம்!!

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு 750 சிசிக்கும் அதிகமான பைக்குளின் இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை ஆகும் அதிக என்ஜின் திறன் கொண்ட மோட்டார் பைக்குகளின் விலை குறையும். இதன்படி ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக்குகளின் விலை இந்தியாவில் சரிவடையும் என சொல்லப்படுகிறது.

2020 ஆம் ஆண்டிலேயே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியது. ஏனெனில் அவற்றின் பைக்குளின் விலை அதிகமாக இருப்பதால் மக்களிடையே பெருமளவில் வரவேற்பு இல்லை. வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் விலை தான் பிரச்சினையாக இருந்தது. தற்போதைக்கு இந்தியாவில் ஹீரோ நிறுவனம் ஹார்லி டேவிட்சனின் எக்ஸ்440 வாகனத்தை உற்பத்தி விற்பனை செய்து வருகிறது.

ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இந்த வாகனத்தின் என்ஜின் திறன் 400 சிசி. கடந்த ஓராண்டில் ஹீரோ மோட்டார் நிறுவனம் 11,000க்கும் அதிகமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எக்ஸ்400 ரக வாகனத்தை வாகனத்தை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது இந்த வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலை 2.39 லட்சம் ஆக இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரியை விதித்திருந்தார். இதனை அடுத்து மூன்று மாத காலத்திற்கு அந்த வரி விதிப்பை தள்ளி வைத்திருக்கிறார். இந்த சூழலில் அமெரிக்காவுடன் மத்திய அரசு சமாதான பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு அமெரிக்க நிறுவனங்களின் குறிப்பிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சலுகைகள் வழங்குவதற்கு முன் வந்திருக்கிறது.

750 சிசி மற்றும் அதற்கு மேல் என்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் இறக்குமதி வரியை நீக்குவதற்கு முடிவு செய்திருப்பதே அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதித்து தங்களுடைய வாகனத்தை விற்பனை செய்வதற்கு சாதகமாக தான் கொண்டு வரப்படுகிறது என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இதுபோல அதிக என்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் விற்பனை என்பது மொத்த வாகன விற்பனையில் சொற்பமாக தான் இருக்கிறது. எனவே இந்த இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்குவதன் மூலம் உள்நாட்டு இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது 500 லிருந்து 800சிசி வரையிலான இருசக்கர வாகனப் பிரிவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் அதிகம் செலுத்துகிறது. இந்திய சந்தையில் விற்பனையாகும் அதிக எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் 95 சதவீதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாகனங்களாக தான் இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+