அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 50 சதவீத வரியை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் இந்த 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த இயங்கக்கூடிய ஆயிரக்கணக்கான தொழில்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் திருப்பூர், கரூர் ,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருமளவில் அமெரிக்க சந்தையை நம்பி தான் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த 50 சதவீத வரி விதிப்பு அவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தீவிரமாக வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

எப்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட போகிறது என்ற தகவலை டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடி நல்ல அழகான தோற்றம் உள்ளவர் , அவர் ஒரு சாதனையாளர் அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் எனக்கு உண்டு என கூறினார் . மோடிக்கும் எனக்கும் சிறந்த நட்புறவு இருக்கிறது என குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுடனும் அடுத்தடுத்து அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது , விரைவில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற தகவலை அவர் வெளியிட்டார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சு வார்த்தை என்பது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் படி இந்தியாவிற்கான வரி விதிப்பு என்பது 15% என குறைக்கப்படும் என்ற நல்ல தகவலும் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
அமெரிக்கா முதலில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தது பின்னர் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை ஒரு காரணமாக கூறி கூடுதலாக 25% என மொத்தமாக 50 சதவீத வரியை விதித்து இருக்கிறது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது அது மீண்டும் பழைய நிலைக்கு வர தொடங்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

குஜராத்-க்கு அடித்தது யோகம்.. செமிகண்டக்டர் சிற் உற்பத்தியில் அடியெடுத்து வைக்கும் கேன்ஸ் டெக்னாலஜி..!!

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications