இந்தியாவில் விரைவில் அனைவரும் 250 ரூபாயிலிருந்தே எஸ்ஐபி எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP - Systematic Investment Plan) முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும் என செபி தலைவரான மாதபி பூரி பஜ் தெரிவித்துள்ளார். எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தற்போது 10 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் செபியின் தலைவரான மாதபி பூரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெரும்பாலான பரஸ்பர நிதி திட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உருவாகப் போகின்றன என தெரிவித்தார். அதாவது 250 ரூபாயில் இருந்தே மாதாந்திர எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது கொண்டுவரப்படும், அப்போது அனைத்து தரப்பினரும் இதில் முதலீடு செய்வதற்கு முன் வருவார்கள் இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டு துறை பெருமளவில் வளர்ச்சி அடையும் என்றார்.

அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டு துறை பல மடங்கு வளர்ச்சியடைய போகிறது என தெரிவித்தார். அண்மைக்காலமாக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே பரவலாக அதிகரித்துள்ளது பலரும் தங்களுடைய சேமிப்புகளை மியூச்சுவல் ஃபண்டுகளை நோக்கி திருப்பி விடுகின்றனர்.
இருந்தாலும் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ஒரு மாதத்திற்கு 1,000 ரூபாய் என உள்ளது, குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் மட்டுமே 100 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம் என்ற வாய்ப்பை வழங்குகின்றன. ஆனால் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பமானது பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளின் ஆரம்ப முதலீட்டு தொகையை மாதத்திற்கு ₹250 என்ற அளவிற்கு குறைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது வந்துள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் மியூச்சுவல் ஃபண்டு மேலாண்மைக்கான செலவினங்களை பெருமளவில் குறைத்துள்ளது.
இது மேலும் குறையும் அப்போது, குறைந்த வருமானம் கொண்டவர்களும் தங்களிடம் இருக்கக்கூடிய தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் வருவார்கள். இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டு துறை வளர்வதோடு மட்டுமில்லாமல் சிறு வருமானம் கொண்ட முதலீட்டாளர்களும் ஒரு கணிசமான தொகையை லாபமாக பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவில் எஸ்ஐபி வாயிலாக மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டும் 21,262 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது 2016 ஆம் ஆண்டில் 3,000 கோடியாக தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Story written by: Devika
More From GoodReturns

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications