விஜய் என்னை உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக.. மனைவி சங்கீதா-வின் முக்கிய குற்றச்சாட்டு இதுதான்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவனருமான விஜய் தற்போது சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மார்ச் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் என்னை உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக.. மனைவி சங்கீதா-வின் முக்கிய குற்றச்சாட்டு இது!

27 ஆண்டு திருமண வாழ்க்கை முறிவு
விஜய் மற்றும் சங்கீதாவின் திருமணம் 1999ஆம் ஆண்டு சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. சங்கீதா விஜயின் ரசிகையாக இருந்தவர், பின்னர் அவரை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள்
சங்கீதா தாக்கல் செய்த மனுவில் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய்க்கும் மற்றொரு நடிகைக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதாகவும், இதை கண்டித்தும் விஜய் அதை கைவிடவில்லை என்றும் கூறியுள்ளார். "கள்ள உறவை கைவிடுவதாக கூறி ஏமாற்றினார். 2021ஆம் ஆண்டு இந்த உறவை நான் கண்டுபிடித்தேன். அதன்பிறகு வழக்கறிஞர்கள் மூலம் சுமூகமாக தீர்க்க முயற்சித்தேன், ஆனால் தீர்வு கிடைக்கவில்லை" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நடிகை விஜயுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாகவும், விஜய் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது தனக்கும் குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். விஜய் தன்னை கடுமையாக நடத்தியதாகவும், சண்டைக்கான காரணம் குறித்து பேச மறுத்ததாகவும், ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியில் தனிமைப்படுத்தி வைத்ததாகவும் சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார்.

தாம்பத்திய உறவு மீதான குற்றச்சாட்டு
மிக முக்கியமாக, விஜய் தன்னுடனான தாம்பத்திய உறவை தவிர்த்துவிட்டதாக சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உணர்வுப்பூர்வமாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை புறக்கணித்துவிட்டதாகவும், சமூக மற்றும் ப்ரெபெஷ்னல் வாழ்க்கையிலிருந்து தன்னை விலக்கி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவே விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு மற்றும் அடுத்த கட்டம்
சங்கீதா சமர்ப்பித்த மனு மார்ச் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இருவரிடமும் விளக்கம் கேட்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதனால் விஜய் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், விஜயின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப கௌரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் சங்கீதா மனுவில் கோரியுள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி
தமிழகத்தில் விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய இந்த தகவலை கவலையுடன் பார்க்கின்றனர். விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த வழக்கு அவரது பொது பிம்பத்தை பாதிக்கலாம் என்ற அச்சம் ரசிகர்களிடையே உள்ளது. மார்ச் 20ஆம் தேதி நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளதால், இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், விஜய் - சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 27 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும் நிலையில், இந்த வழக்கு அடுத்தக்கட்ட விசாரணைகளை எதிர்நோக்கி உள்ளது. ரசிகர்கள் இந்த விவகாரத்தை கவலையுடன் பின்பற்றி வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+