இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களில் ஒருவர் விஜய் மல்லையா. இவர் இங்கிலாந்த் மற்றும் பிரான்சில் 330 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியுள்ளதாக CBI குற்றப்பத்திரிக்கையில் கூறியுள்ளது.
இந்த சொத்துகள் 2015 - 16ம் ஆண்டில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மிக நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட சமயம் வாங்கியதாக கூறப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில் வங்கிகளில் கடனை செலுத்தாமல் நிலுவையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் இப்படி சொத்து வாங்கியிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடன் மோசடி
விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி விட்டு கடனை திரும்ப செலுத்தாமல் நாடு விட்டு, நாடு தப்பியோடியவர். ஐடிபிஐ வங்கியில் 900 கடன் மோசடியில் சிபிஐ விசாரித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவராவார்.
விஜய் மல்லையா வங்கி அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொண்டு மோசடி செய்து கடன் வாங்கியதும் கண்டறியப்பட்டது. இது குறித்து ஐடிபிஐ வங்கியின் முன்னாள் அதிகாரியான தாஸ் குப்தா என்பவர் தனது அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி, மோசடி செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.
கடன் வரம்பை மீறி கடன்
கடன் வரம்பையும் மீறி, விதிமுறைகளை மீறி பொருட்படுத்தாமலும் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஐடிபிஐ வங்கி கடன் கொடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் குழுவாக, விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுத்த நிலையில், அது பிரச்சனையில் இருக்கும்போது கூட ஐடிபிஐ வங்கி கடன் கொடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டும் இருந்தது.
விஜய் மல்லையாவுக்கு எதிராக வழக்கு
இதற்கிடையில் எஸ்பிஐ தலைமையிலான பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்திய ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு & காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்ஷியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கை நடத்தி வருகின்றன.
பல் கேள்விகள்
விஜய் மல்லையா ஒட்டுமொத்தமாக 17 வங்கிகளில் ரூ.9000 கோடி அளவிற்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டே தப்படியோடிவர். ஆனால் இந்த கடன் என பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், அந்த காலகட்டத்தில் மோசடியாக சொத்தும் வாங்கியிருப்பது இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications