தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிகரித்திருக்கும் வேளையில் பள்ளிக் கல்வி துறைக்கான பல முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தவெக அரசு தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையினரை கவரும் வகையில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக மிக முக்கியமான திட்டங்களை தனது முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே வெளியிட உள்ளது.

விஜய் தலைமையிலான அரசு பள்ளி கல்வி துறையில் ஏற்கனவே பல்வேறு மாற்றங்களை செய்து மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று இருக்கும் வேளையில் விஜய்யின் நண்பா நண்பீஸ்-களை கவர 3 முக்கிய திட்டங்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகிறது.
1. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கான ஊக்க தொகையை ஆண்டுக்கு 8000 ரூபாய் கொடுக்கும் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 11, 12 வகுப்பு மட்டும் படித்தால் போதுமா அல்லது 6ஆம் வகுப்பில் இருந்து அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டுமா என்பது பட்ஜெட் அறிவிப்பின் மூலம் தெரிய வரும்.
2. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசு பள்ளியில் படித்து மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் சேரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளவை 10 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது அறிவிக்கப்பட்டால் பல ஆயிரம் அரசு மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பலன் பெறுவார்கள். இந்த ஆண்டுக்கான் சேர்க்கை நடைபெற்ற நிலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.
3. அடுத்தாக உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரையிலான பிணையில்லா கடன் வழங்கும் திட்டமும் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இத்திட்டம் அனைத்து மாணவர்களுக்குமா அல்லது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அளிக்கப்படுமா என்பது பட்ஜெட் அறிவிப்பின் வாயிலாக தெரிய வரும்.


Click it and Unblock the Notifications