தூத்துக்குடி: வியட்நாமை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் (VinFast) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. நடப்பு ஆண்டின் மத்தியிலேயே இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் மின்சார வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாளராக வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தங்களுடைய உற்பத்தி மையங்களை நிறுவ ஆர்வம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது.

2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்த ஆலை நிறுவப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த ஆலை நடப்பாண்டின் மத்தியிலேயே செயல்பாட்டுக்கு வரும் என நம்புவதாக இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி பாம் சாவ் தெரிவித்துள்ளார் . டெல்லியில் நடைபெற்று வரக்கூடிய இந்திய வாகன கண்காட்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தங்களுடைய வின்பாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகனம் மட்டுமின்றி மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையையும் அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளையும் தீவிரபடுத்தி உள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவில் இந்த நிறுவனம் விகுரூப் என்ற நிறுவனத்தை தொடங்கி நாடு முழுவதும் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய சந்தைக்காக இந்நிறுவனம் தயாரித்த முதல் மின்சார வாகனம் விஎஃப் 6 மற்றும் விஎஃப்7 டெல்லியில் நடைபெற்று வரக்கூடிய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிமியம் ரக மின்சார கார்களும் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.
மேலும் தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்கப்படுவது மட்டும் அல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்வதற்கான ஏற்றுமதி செய்யும் HUB ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி ஆலை வெறுமென இந்தியாவுக்காக விற்கப்படுவது இல்லை, சர்வதேச சந்தைகாக உருவாக்கப்பட்டு வருவது தான் வின்பாஸ்ட்-ன் மாஸ்டர் பிளான்.
தூத்துக்குடி மாவட்டம் விமான நிலையம் மற்றும் துறைமுகமாக இரண்டையும் கொண்டு இருப்பதால் ஏற்றுமதி இறக்குமதிக்கு உகந்த இடமாக இருக்கிறது என வின்பாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வியட்நாமில் தற்போது இந்த நிறுவனம் 50000 மற்றும் 1 லட்சம் மின்சார வாகனங்களை தயார் செய்யக்கூடிய இரண்டு ஆலைகளை செயல்படுத்தி வருகிறது. மூன்றாவது ஆலையை இந்தியாவில் தமிழ்நாட்டில் நிறுவுகிறது.
முதல்கட்டமாக 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து ஆலை செயல்படுத்தப்படும் என்றும் பின்னர் படிப்படியாக இந்த முதலீடு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வின்பாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அனைத்து நகரங்களிலும் டீலர்களை நியமனம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. வின்பாஸ்ட் நிறுவனத்தின் இந்த ஆலை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 3000 முதல் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications