இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சுமார் 35 சதவீதம் அதிகரித்து 4.5 லட்சம் வாகனங்கள் ஆகஸ்ட் மாத்தில் மட்டும் விற்ககப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து உலகில் வருடத்திற்கு 50 லட்சம் கார்களை விற்பனை செய்யப்படும் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த முக்கியமாக கட்டத்தில் தூத்துக்குடி-யில் இருக்கும் வியட்நாம் நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன நிறுவனமான வின்பாஸ்ட் தொழிற்சாலையில் 3 முக்கிய மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் இந்த கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களும் உற்பத்தி பணிகளை நிறுத்தவும் வின்பாஸ்ட் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் வர்த்தகத்தை பெறுவதற்காக , அமெரிக்கா - ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் வேளையில் இந்தியாவை அடிப்படையாக கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்குடன் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் தூத்துக்குடியில் மிகப்பெரிய ஆலையை அமைந்தது.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் VF6 மற்றும் VF7 என 2 எலட்ரிக் எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து VF3 என்ற 2 கதவுகள் கொண்ட கார் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டது. தற்போது இந்த 3 கார்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இதை வின்பாஸ்ட் நிர்வாகம் முழுமையாக மறுப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் விளக்கம் அளிக்கையில் இந்தியாவில் உங்களுடைய உற்பத்தி திட்டங்கள் நிறுத்தவுமில்லை, தடைப்படவும் இல்லை. இதேபோல் தூத்துக்குடி ஆலையில் தொடர்ந்து வின்பாஸ்ட் கார்களை CKD முறையில் இறக்குமதி செய்து அசம்பிள் செய்யப்பட்டுவதாக தெரிவித்துள்ளது.
வின்பாஸ்ட் நிறுவனத்தின் மறுப்பை உறுதி செய்யும் வகையில் ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் 2196 கார்களை வின்பாஸ்ட் விற்பனை செய்துள்ளது. கடந்த மாதம் 1530 கார்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில் தற்போது 43 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
EV பிரிவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் பட்டியலில் வின்பாஸ்ட் 4 வது இடத்தில் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மாருதி சுசூகி நிறுவனத்தை காட்டிலும் அதிக கார்களை வின்பாஸ்ட் விற்பனை செய்து, ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியான வர்த்தக வளர்ச்சி அடைந்த நிறுவனமாக உள்ளது.
முதல் இடத்தில் இருக்கும் டாடா நிறுவனம் 12,980 கார்களை விற்பனை செய்தாலும், 2வது இடத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவாக 6367 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில் இந்திய சந்தைக்கு முதல் முறையாக, புதிதாக வந்த வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் 2,196 கார்களை விற்பனை செய்துள்ளது மக்கள் மத்தியில் பிரபலம் அடைய துவங்கியுள்ளது தெரிகிறது.


Click it and Unblock the Notifications