தூத்துக்குடியில் மாஸ்காட்டப்போகும் Vinfast.. சிஇஓ வெளியிட்ட பரபர தகவல்..!

தூத்துக்குடி: வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (Vinfast) தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தன்னுடைய வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது. கட்டுமான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாத இறுதியிலேயே ஆலை செயல்பட தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாம் ஷாவ், நிறுவன பங்குதாரர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் பேசினார்.

தூத்துக்குடியில் மாஸ்காட்டப்போகும் Vinfast.. சிஇஓ வெளியிட்ட பரபர தகவல்..!

எதிர்காலத்தில் வியட்நாம் மட்டுமில்லாமல் இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய சந்தைகளிலும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கவனம் செலுத்தும் எனக் குறிப்பிட்டார். அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா மின்சார வாகன நிறுவனத்திற்கு போட்டியாளராக வின்ஃபாஸ்ட் நிறுவனம் கருதப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக தான் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. இந்த ஆலையில் ஓர் ஆண்டுக்கு 1,50,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மின்சார வாகனம் மட்டுமில்லாமல் மின்சார வாகனத்திற்கு தேவையான பேட்டரியும் இதே ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என கூறுகிறது. இது தவிர இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தங்களுடைய நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் மற்றும் துறைமுகமாக இரண்டும் இருப்பதால் ஏற்றுமதிக்கு உகந்த இடமாக இருக்கும் என கருதி தான் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி ஆலையை நிறுவி இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது வின்ஃபாஸ்ட் நிறுவனம் வியட்நாமில் இரண்டு உற்பத்தி ஆலைகளை கொண்டிருக்கிறது. ஒரு உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களும் மற்றொரு ஆலையில் ஆண்டுக்கு 1 லட்சம் மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது. அதேவேளையில் மேற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது என்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவில் இருக்கும் ஆலையில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூறியிருக்கிறது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் இந்த உற்பத்தி ஆலை மூலம் 3,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+