தூத்துக்குடி: வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (Vinfast) தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தன்னுடைய வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது. கட்டுமான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாத இறுதியிலேயே ஆலை செயல்பட தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாம் ஷாவ், நிறுவன பங்குதாரர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் பேசினார்.

எதிர்காலத்தில் வியட்நாம் மட்டுமில்லாமல் இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய சந்தைகளிலும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கவனம் செலுத்தும் எனக் குறிப்பிட்டார். அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா மின்சார வாகன நிறுவனத்திற்கு போட்டியாளராக வின்ஃபாஸ்ட் நிறுவனம் கருதப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக தான் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. இந்த ஆலையில் ஓர் ஆண்டுக்கு 1,50,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மின்சார வாகனம் மட்டுமில்லாமல் மின்சார வாகனத்திற்கு தேவையான பேட்டரியும் இதே ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என கூறுகிறது. இது தவிர இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தங்களுடைய நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் மற்றும் துறைமுகமாக இரண்டும் இருப்பதால் ஏற்றுமதிக்கு உகந்த இடமாக இருக்கும் என கருதி தான் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி ஆலையை நிறுவி இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது வின்ஃபாஸ்ட் நிறுவனம் வியட்நாமில் இரண்டு உற்பத்தி ஆலைகளை கொண்டிருக்கிறது. ஒரு உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களும் மற்றொரு ஆலையில் ஆண்டுக்கு 1 லட்சம் மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது. அதேவேளையில் மேற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது என்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவில் இருக்கும் ஆலையில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூறியிருக்கிறது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் இந்த உற்பத்தி ஆலை மூலம் 3,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications