தற்போது பெரும்பாலானவர்கள் வீட்டில் கணவன் மனைவி என இரண்டு பேர் சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும் அந்த சம்பளமே போதவில்லை எனக் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். சம்பாதிப்பது மட்டுமில்லாமல் குழந்தைகள் கல்வி, எதிர்கால நிதி தேவை என முதலீடு , சொந்த வீடு வாங்குவது என பல செலவுகள் இருக்கின்றன. ஆனால் இங்கே ஒரு நபர் 10,000 ரூபாய் சம்பளத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை நடத்துகிறார் என்ற செய்தி எக்ஸ் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
சஞ்சீவ் சிங் என்ற நபர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எங்களுடைய அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாவலராக ஒரு இளைஞர் வேலை செய்கிறார். அவருக்கு 25 வயதுக்குள் தான் இருக்கும். இரண்டு இடங்களில் அவர் வேலை பார்க்கிறார் 10,000 ரூபாய்க்குள் தான் அவருக்கு வருமானம் வருகிறது. அவருக்கு தற்போது மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த 10,000 ரூபாய்க்கு கீழ் இருக்கக்கூடிய வருமானத்தில் தான் அவர் அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என ஐந்து பேர் கொண்ட குடும்பம் நடத்தப்படுகிறது என கூறியிருக்கிறார்.

நாமெல்லாம் 25 வயதில் தான் வேலைக்கு செல்ல தொடங்குகிறோம் ஆனால் இந்த இளைஞருக்கு இந்த வயதிலேயே 5 பேர் கொண்ட குடும்பத்தின் சுமை வந்து விழுந்து விட்டது. இவரை போல பல இளைஞர்களும் இந்த வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், கொள்கைகளும் விழிப்புணர்வும் யாருக்கு கட்டாயம் தேவைப்படுகிறதோ அவர்களை சென்றடைவதே இல்லை என்பதையே இது காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும் நூற்றுக்கணக்கானவர்களின் பின்னூட்டங்களையும் பெற்றுள்ளது. ஒரு நபர் பலரும் இந்தியாவில் நிதி சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் ஏராளமான மக்களுக்கு சென்று சேர்வதே இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு நபர் ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக இவர் இரண்டு வேலைக்கு செல்கிறார், குழந்தைகளை வளர்க்கவும் ஆளாக்கவும், இனி இவர் பாடுபட வேண்டும் என கூறியிருக்கிறார்.
ஒரு நபர் அந்த இளைஞருக்காக பாவம் பார்ப்பதை விட்டுவிட்டு உங்கள் அப்பார்ட்மெண்டில் இருக்கும் அனைவரும் அவருக்கு சேர்த்து சம்பளம் கொடுக்கலாமே என கேள்வி எழுப்பி இருக்கிறார். ஒரு பயனர் இளம் வயதிலேயே குழந்தை பெற்றுவிட்டார்கள் இவர்கள் 45 வயது ஆகும்போது மூன்று பிள்ளைகளும் வருமானம் ஈட்ட தொடங்கி இருப்பார்கள் என கூறியிருக்கிறார். பலரும் பாதுகாவலர் வேலைக்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளமா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications