இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவரும், ஆர்சிபி அணியில் ஸ்டாராகவும் இருக்கும் விராட் கோலி சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலான பணத்தை முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே தனது ஹோட்டல் வர்த்தகத்தை பல நகரங்களில் விரிவாக்கம் செய்வதில் பிசியாக இருக்கும் விராட் கோலி.. தனது விளம்பரம், ஹோட்டல், பல்வேறு முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை முக்கிய சொத்துக்களில் முதலீடு செய்து வருகிறார்
விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா மகாராஷ்டிராவின் கடற்கரை ஊரான அலிபாக்கில் 5.19 ஏக்கருக்கும் மேலான நிலத்தை வாங்கியுள்ளனர். ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஜிராட் கிராமத்தில் இரண்டு பிளாட்களாக இந்த நிலத்தை அலிபாக் பகுதியில் வாங்கியுள்ளனர். இந்த 5.16 ஏக்கர் நிலத்திற்காக சுமார் 37.86 கோடியை கொடுத்துள்ளனர் விராட் மற்றும் அனுஷ்கா.

இந்த நில விற்பனைக்கான பதிவு செவ்வாய்க்கிழமை நடந்ததுள்ளதாக CRE Matrix என்ற நிறுவனத்தின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவரான விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா இந்த நிலத்தை வாங்கியது மூலம் மீண்டும் அலிபாக் சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பகுதியில் விராட் கோலி ஏற்கனவே ஒரு நிலத்தை வாங்கியிருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக இப்பகுதியில் நிலத்தை வாங்கியுள்ளார்.
2022-ல் விராட் கோலி மற்று்ம அனுஷ்கா ஷர்மா ஆகியோர் அலிபாக்கில் சுமார் 8 ஏக்கர் நிலத்தை வாங்கி பண்ணை வீடு (farmhouse) கட்ட திட்டமிட்டிருந்தனர். இப்போது வாங்கிய நிலத்துடன் சேர்த்து மொத்தம் 13 ஏக்கருக்கும் மேல் நிலம் இவர்கள் அலிபாக்-ல் வாங்கியுள்ளனர்.
அலிபாக்-ல் விராட் கோலி மட்டும் அல்லாமல் பல பிரபலங்கள் தொழிலதிபர்கள் நிலத்தை வாங்கி வருகின்றனர். அலிபாக் மும்பையின் அருகில் உள்ள கடற்கரை பகுதியாகும். மும்பை துறைமுகத்திற்கு எதிரே அமைந்துள்ள இந்த ஊர் சமீப காலங்களில் பிரீமியம் ரெசிடென்ஷியல் சந்தையாக மாறி வருகிறது.
மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க், படகு மற்றும் ஸ்பீட் போட் சேவைகள் காரணமாக தெற்கு மும்பையிலிருந்து அலிபாக் செல்லும் பயண நேரம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இப்பகுதி தற்போது பெரும் பணக்காரர்களின் முக்கிய ஸ்பாட் ஆக மாறி வருகிறது.
இதனால் மும்பையில் உள்ள பெரும் பணக்காரர்கள் அடர்த்தியாக பகுதிகளில் வசிப்பதை காட்டிலும் இத்தகைய விசாலமான இடத்தில் வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளை அமைக்க அலிபாக்கை தேர்வு செய்கின்றனர். கடந்த 5 வருடத்தில் பெரிய அளவிலான, அதிக மதிப்பிலான நில ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவதால், இந்த பகுதி மும்பையின் பிரீமியம் வசிப்பிட சந்தையாக உருவெடுத்து வருகிறது.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

T20 உலகக்கோப்பை இறுதி போட்டி: கோப்பையுடன் சேர்த்து இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்பிரைஸ்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications