இந்தியர்கள் ஆதிகாலத்தில் இருந்தே வர்த்தகத்தில் சிறந்து விலங்கி வந்தனர், உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து வெளிநாட்டு ஏற்றுமதி வரையில் கலை பொருட்கள் முதல் உணவு பொருட்கள் வரையில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.
இப்படியிருக்கையில் பிரிட்டிஷ் நாட்டின் இந்தியாவில் வியாபராத்திற்கு வந்த நாளில் இந்தியாவில் கொடிக்கட்டி பறந்த வியாபாரிகளும், வர்த்தகர்களும் ஏராளம். ஆனால் முகலாயர்கள் கோலோச்சிய காலக்கட்டத்தில் இந்தியாவில் மிகப்பெரிய மற்றும் பணக்காரராக இருந்தவர் விர்ஜி வோரா (Virji Vora) என்பவர் தான்.

விர்ஜி வோரா எந்த அளவுக்கு பணக்காரர் என்றால் பிரிட்டிஷ் நாட்டின் கிழக்கிந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் தொழில் துவங்க 1617 முதல் 1670 வரையில் பெரிய அளவில் நிதியுதவி செய்தது விர்ஜி வோரா தான்.
1590ல் பிறந்த விர்ஜி வோரா 1670-ல் மறைந்தார், இந்தியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனையாளராகவும், மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்த விர்ஜி வோரா-வின் சொத்து மதிப்பு அப்போதே 80 லட்சம் ரூபாய். விர்ஜி வோரா இந்தியாவில் இருந்து மிளகு, தங்கம், ஏலக்காய் போன்ற பல பொருட்களை உலக நாடுகளுக்கு அப்போதே ஏற்றுமதி செய்துள்ளார்.
பிரிட்டிஷ் நாட்டவர்களுக்கு 1629 முதல் 1668 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க பெரிய அளவில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் விர்ஜி வோரா. அந்த காலத்தில் எந்த பொருளாக இருந்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் வாங்க கூடிய ஒரே ஆள் விர்ஜி வோரா மட்டும் தான்.
வாங்கிய பொருளை மொத்தமாகவும் சில்லறையாகவும் அதிக லாபத்தில் விற்பனை செய்யும் அளவுக்கு பிஸ்னஸ் கனெக்ஷன்-ஐ அந்த காலத்திலேயே வைத்திருந்தாராம்.
விர்ஜி வோரா-வின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்றால் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் இந்தியாவின் டெக்கான் பகுதியைக் கைப்பற்றும் போரின் போது நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஔரங்கசீப் தனது தூதரை விர்ஜி வோராவிடம் அனுப்பி பணம் கேட்டு உள்ளார்.
இது மட்டும் அல்லாமல் விர்ஜி வோரா முகலாய மன்னர் ஷாஜகானுக்கு நான்கு அரபு குதிரைகளை பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications