இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் டாடா குழுமத்தின் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா என 3 நிறுவனங்கள் இருந்தாலும், இண்டிகோ பெரிய அளவிலான ஆதிக்கம் செய்கிறது.
இண்டிகோ நிறுவனத்துடன் போட்டிப்போட டாடா குழுமம் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் தற்போது டாடா குழுமத்தில் பல முக்கியமான மறுசீரமைப்பு நடவடிக்கை நடத்தி வருகிறது.
இதில் டாடா குழுமத்தின் விமானப் போக்குவரத்து சேவையும் இணைந்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தில் தற்போது ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா என 3 விமானச் சேவை நிறுவனங்கள் உள்ளது. இதை இணைத்து ஓரே நிறுவனமாக மாற்ற டாடா குழுமம் தீவிரமாக உள்ளதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஸ்தாரா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியில் டாடா உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இரு நிறுவனங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் புதிதாக ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
25 சதவீத பங்குகள்
இப்புதிய கூட்டணி நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகப்படியாக 25 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்கும். இந்த இணைப்பை முடிக்க ஒரு வருடம் ஆனாலும் இரு நிறுவனத்தில் அதிகப்படியான செலவுகள் குறைத்து, அதிக வர்த்தகம் மற்றும் வருமானத்தைப் பெற முடியும் என டாடா நம்புகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா
இதற்கு முன்பு டாடா குழுமம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா வர்த்தகத்தை இணைக்கும் பேச்சுவார்த்தை துவங்கி இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் பயணிகள் புக்கிங் தளத்தைப் பகிர்ந்து ஒன்றாகப் பயன்படுத்தும் பணிகளும் ஒருப்பக்கம் நடந்து வருகிறது.
லாபம்
3 ஆகப் பிரிந்துக் கிடைக்கும் வர்த்தகத்தை ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் விமானங்களை எளிதாகத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும், இதேபோல் நிர்வாகச் செலவுகள் குறையும், விமான நிலையத்தில் ஆதிக்கம் அதிகரிக்கும். ஆனால் கேபின் க்ரூ சீருடை, விளம்பரங்களுக்கு அதிகப்படியான செலவாகும்.