டெல்லி: அடுத்தடுத்து பல விமானங்களை ரத்து செய்தது தொடர்பான விரிவான அறிக்கையை வழங்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று, திங்கட்கிழமை, போதுமான பயணிகள் இல்லாததால், 50க்கும் மேற்பட்ட விமானங்களை விஸ்தாரா நிறுவனம் ரத்து செய்தது. கடந்த வாரத்தில் விஸ்தாரா 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததையும் மினிஸ்ட்ரி ஆப் சிவில் ஏவியேஷன்(MoCA) கவனித்து உள்ளது. இதன் அடிப்படையில் விஸ்தாரா நிறுவனம் தக்க பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் ஏ320 விமானங்களில் , பைலட்களுக்கான ஊதியம் புதிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் குறைக்கப்பட்டதால், பல பைலட்கள் விஸ்தாரா நிறுவனத்தில் இருந்து விலகினர். இதுவே விமான நிறுவனத்தில் போதுமான விமானிகள் இல்லாமல் போனதற்கு காரணமாக கருதப்பட்டது. இதனால் ஏற்பட்ட தொடர் விமான ரத்து காரணமாக பல பயணிகள் அவதிக்குட்பட்டனர்.
விஸ்தாராவின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது, சமீபத்திய நாட்களில் விமான ரத்து மற்றும் தாமதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பணியாளர்கள் கிடைக்காதது உட்பட பல காரணிகள் காரணமாக இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். நடப்பு கோடை கால அட்டவணையில் 25.22 சதவீதம் கூடுதல் வாராந்திர விமானங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறோம்.
விஸ்தாரா நிறுவனத்தின் பயணிகளுக்கு கஷ்டம் தராமல் விஷயங்களை எளிதாக்க கடுமையாக உழைத்து வருகிறோம். தற்காலிக தீர்வாக, அதன் விமான நெட்வொர்க்கில் நல்ல இணைப்புகள் இருப்பதை உறுதிசெய்ய விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான விஸ்தாரா விமான நிறுவனம், சில உள்ளூர் வழித்தடங்களில் பரந்து விரிந்த போயிங் 787 ட்ரீம்லைனர் போன்ற பெரிய விமானங்களை அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்துகிறது" என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார். டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனமும் கடந்த மாதம் இதே போன்ற இடையூறுகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், விமானப் பிரச்சனைகளுக்கு பயணிகளிடம் மன்னிப்புக் கேட்ட விஸ்தாரா விமான நிறுவனம், உண்மையில் எத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதை தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வேறு விமானத் ஆப்ஷன்கள் வழங்குவதாகவும் அல்லது பணத்தைத் திருப்பித் தருவதாகவும், சிரமத்திற்கு மன்னிப்புக் கோருவதாகவும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டு உள்ளார்.
"நாங்கள் விஷயங்களைச் சரிசெய்ய முயற்சிக்கிறோம், விரைவில் எங்கள் வழக்கமான எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கத் தொடங்குவோம்" என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications