நொய்டா: சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ, இந்தியாவில் தங்களுக்கு சொந்தமான உற்பத்தி ஆலையை மைக்ரோமேக்ஸின் தாய் நிறுவனத்திடம் ஒப்படைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bhagwati Products இது மைக்ரோமேக்ஸின் தாய் நிறுவனம். விரைவில் விவோ நிறுவனத்தின் செல்போன் ஆலையின் கட்டுப்பாடு இந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி, விவோ நிறுவனம் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது.

2023ஆம் நிதி ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 30,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. அதுமட்டுமின்றி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாக விவோ இருக்கிறது.
சீன நிறுவனமாக இருப்பது மற்றும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இணங்க முடியாத சூழல் ஆகியவை காரணமாக இந்நிறுவனம் புதிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஓப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் செயல்பாடுகளை திறம்பட நடத்துவதற்கு என ஒரு நிறுவனத்தை தேடி வந்தன. இந்நிலையில் மைக்ரோமேக்ஸின் தாய் நிறுவனத்துடன் விவோ கை கோர்க்க உள்ளது.
நொய்டா பகுதியில் விவோவுக்கு சொந்தமாக இரண்டு இடங்களில் ஆலைகள் உள்ளன. இதில் முதல்முறையாக நிறுவிய ஆலையை தான் தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாகவும் இது 14 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பதும் தெரிய வந்துள்ளது. மற்றொரு விவோ ஆலையானது 169 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்றும் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் இது அமைக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் ஸ்மார்ட் ஃபோன்களுக்கான புரொடக்சன் லிங்க்டு இன்செண்டிவ் திட்டத்தின்(production-linked incentive ) கீழ் சலுகைகளை பெறுவதற்காகவே, விவோ இந்த வியூகத்தை எடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, பாக்வதி நிறுவனம் மத்திய அரசு வழங்கக்கூடிய இந்த ஊக்கத்தொகையை விவோவிடம் வழங்கும் என தெரிகிறது. எனவே இந்தியாவில் விவோ மற்றும் பாக்வதி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வருவதால் அரசும் இதற்கு ஒப்புதல் வழங்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிற்கு தேவையான பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது என்பது தான் மேக் இன் இந்தியா திட்டம். வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆலைகளின் நிறுவி பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications