இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைக் கட்டியாளும் சீன நிறுவனங்கள் அடுத்தடுத்து வர்த்தக மோசடிகள், பண மோசடிகளில் சிக்கி வருகிறது. தற்போது விவோ மிகப்பெரிய தொகையை மோசடி செய்து அமலாக்க துறையிடம் மாட்டியுள்ளது.
மத்திய அமலாக்க துறை செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் சுமார் 22 மாநிலங்களில் Vivo நிறுவனத்தின் வளாகங்கள் மற்றும் தொடர்புடைய 44 இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் விவோ நிறுவனத்தின் பண மோசடி செய்ய அடித்தளமிட்டது யார் என்பது உட்படப் பல விஷயங்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் வரி எய்ப்புச் செய்யப் பெரும் தொகையைக் கணக்கில் காட்டாமலேயே சீனாவிற்குத் திருப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
62,476 கோடி ரூபாய் அபேஸ்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான விவோ-வின் இந்தியப் பிரிவு அதன் மொத்த விற்றுமுதல் அதாவது Turnover-ல் கிட்டத்தட்ட 50 சதவீத பணத்தைச் சுமார் 62,476 கோடி ரூபாயை இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு சீனா-வுக்கு அனுப்பியுள்ளது என அமலாக்கத் துறை வியாழக்கிழமை (இன்று) கூறியுள்ளது.
அமலாக்க துறை சோதனை
அமலாக்க துறை விவோ நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 23 நிறுவனங்களுக்குச் சொந்தமான 44 இடங்களில் செய்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 119 வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.465 கோடி மதிப்புள்ள பணம், ரூ.73 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின் லுவோ
இதே வேளையில் விவோ இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் சூத்திரதாரியாக இருந்தது பின் லுவோ என்ற நபர் தற்போது நாட்டை விட்டே வெளியேறியதாக அறிவித்துள்ளது அமலாக்க துறை.
23 நிறுவனங்கள்
மேலும் இந்தியாவில் விவோ போன்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 23 நிறுவனங்களில் பொதுவான இயக்குநராகவும் உள்ளார் பின் லுவோ. இதன் மூலம் இவரது தலைமையில் தான் மொத்த பண மோசடியும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தோண்ட தோண்ட மோசடி
அமலாக்க துறையின் சோதனையில் விவோ மிகப்பெரிய அளவில் சிக்கியுள்ளது மட்டும் அல்லாமல் பல முறைகேடுகள் செய்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் தோண்ட தோண்ட மிகப்பெரிய விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications