இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு காலத்தில் மிகப்பெரிய மதிப்புடன் வலம் வந்த பிரிட்டன் நாட்டின் வோடபோன் நிறுவனம் அதிகப்படியான நிலுவை தொகையால் மாட்டிக்கொண்டது, இதற்கு மத்தியில் ரிலையன்ஸ் ஜியோ-வின் பிரம்மாண்ட 4ஜி சேவை அறிமுகத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.
ஜியோ-வை சமாளிக்கும் வகையில் வோடபோன் நிறுவனம் இந்தியாவின் ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைந்து சில மாதங்கள் இந்தியாவில் அதிக டெலிகாம் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக வலம் வந்தது.

ஆனால் அதிகப்படியான நிலுவை தொகையாலும், வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் விரிவாக்கம் செய்ய முடியாத காரணத்தாலும் இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருகிறது.
இந்தியாவில் தான் இப்படியென்றால் அதன் தலைமையிடமான பிரிட்டன் நாட்டிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். சமீபத்தில் பிரிட்டன் வோடாபோன் குழுமத்தின் சிஇஓ-வாக Margherita Della Valle நியமிக்கப்பட்டார்.
இவர் தலைமையிலான நிர்வாகம் பல முக்கிய முடிவுகளை எடுத்து வரும் வேளையில் நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி மிகவும் குறைவாகவோ அல்லது ஜீரோ-வாக இருக்கலாம் என கணித்துள்ளது. இதனால் நிறுவனத்தை சிறியதாகவும், எளிமையானதாகவும் மாற்ற முடிவு செய்துள்ளார்.
இது கிட்டத்தட்ட கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்களின் செலவின குறைப்பு போலவே வோடாபோனும் லாபத்தை தக்க வைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. டெக் துறை, வங்கி, கன்சல்டிங் துறையை தான் இந்த பணிநீக்கம் என்ற விஷ பூச்சி கடித்து வந்தது என்றால் தற்போது டெலிகாம் நிறுவனங்களையும் கடிக்க துவங்கியுள்ளது.
ரெசிஷன் அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வேளையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் வல்லரசு நாடுகள் மத்தியில் மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில் வோடபோன் அறிவிப்பு அந்நாட்டு மக்கள் மத்தியிலும், வோடபோன் ஊழியர்கள் மத்தியிலும் எதிர்பார்த்த ஒன்று தான்.
இந்த நிலையில் வோடாபோன் சிஇஓ Margherita Della Valle அறிவிப்பின் படி அடுத்த 3 வருடத்தில் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த பணிநீக்கம் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டு ஊழியர்களை அதிகளவில் பாதிக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications