இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர், மற்ற நிறுவனங்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன.
ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து நஷ்டம் கண்டு வந்த நிலையில், இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக பேரிடியாய் ஏஜிஆர் வழக்கும் வந்தது.
இதனால் வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்தன. சில நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் காணாமல் போயின. இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் ஜியோவின் கடுமையான போட்டியையும் சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.
பெரும் நிவாரணம்
எனினும் தவித்து வந்த நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் பெரும் அவகாசத்தினையும் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து மீளத் தொடங்கியுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல சீர்திருந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கட்டண அதிகரிப்பினை செய்துள்ளன. இதற்கிடையில் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக நிதி திரட்டியும் வருகின்றன.
எஸ்பிஐ-வுடன் பேச்சு வார்த்தை
இதற்கிடையில் வோடபோன் நிறுவனம் அன்னிய முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன், வோடபோன் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடனை அடைக்க திட்டம்
எஸ்பிஐ உடனான பேச்சு வார்த்தை சாதகமாக அமைந்தால், இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அது வழிவகுக்கும். கடனை அடைக்க வழிவகுக்கும். ஆக மொத்தத்தில் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு இது உதவும். எனினும் இந்த பேச்சு வார்த்தை குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
கடன் கிடைக்குமா?
பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், நிறுவனம் எந்த நிதியை பெறும் என்பதில் எந்த விதமான உறுதியும் இல்லை என்றும் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ல் ஒரு கட்டண போரை உருவாக்கிய நிலையில், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் கடன் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
திவால் நிலையில் இருந்து தப்பியது எப்படி?
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான இது மிகப்பெரிய வயர்லெஸ் ஆப்ரேட்டராகவும் உள்ளது. இந்த மொபைல் போன் நிறுவனங்களுக்கு தங்கள் நிலுவையை செலுத்த அரசாங்கம் போதுமான நேரத்தை அனுமதித்த பிறகு, திவால் நிலைக்கு பின்னர் தப்பியது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications