உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் வோக்ஸ்வேகன் ஐரோப்பாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் பெரிய அளவிலான வர்த்தக இழப்பை எதிர்கொண்டு வருகிறது, குறிப்பாக ஐரோப்பிய சந்தையில் சந்தையின் தேவைக்கு அதிகமாக கார்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படாமல் கார்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஜெர்மன் டெக்னாலஜி, ஜெர்மன் கார் விரும்பிகள் மத்தியில் தனிபெயர் பெற்ற வோக்ஸ்வேகன் நிறுவனம் கிட்டத்தட்ட 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அதன் தொழிற்சாலை யூனியன்கள் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் சிஇஓ-வான ஆலிவர் ப்ளூம் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜெர்மனி ஊழியர் சங்கம் 50000 ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் கூடுதலாக 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த அறிவிப்பு வெளியான அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த 3 வருடத்தில் சுமார் 12 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் ஸ்கோடா ஆட்டோ வோகஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் 2025 முதல் செலவுகளை குறைப்பதை துவங்கியிருந்தாலும், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக இதன் வேகம் குறைந்தது. ஆனால் 2027 முதல் பல கட்டங்களாக செலவின குறைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நிர்வாக ஊழியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், ஷோரூம் ஊழியர்கள் வரையில் பணிநீக்கம் செய்யப்படலாம் என கணிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிநீக்கத்தின் மூலம் இந்தியாவில் மட்டும் பல மில்லியன் டாலர் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதேபோல் இந்த தொகை மீண்டும் புதிய வாகன தயாரிப்பில் முதலீடு செய்யப்படும் என்பதையும் வோக்ஸ்வேகன் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
மேலும் வோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கும் வேளையில் உளகளவில் செய்யப்படும் பணிநீக்கம், செலவின குறைப்பு அனைத்தும் தற்போது புதிய கார் தயாரிப்பில் ஈடுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் வோல்ஸ்வேகன் AG நிறுவனம் இந்திய வர்த்தகத்தில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை JSW குழுமத்திற்கு விற்க திட்டமிட்டு இதற்கான பேச்சுவாத்தையில ஈடுப்பட்டு உள்ளது.
JSW குழுமம் சமீபத்தில் ஆட்டோமொபைல் துறையில் பெரும் ஆர்வம் காட்டி வரும் சீன SAIC நிறுவனத்திடம் இருந்த MG மோட்டார் இந்திய நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது.
இதை தொடர்ந்து தற்போது JSW தனது சொந்த பிராண்டின் கீழ் Jetour T2 மாடல் காரை இந்த தீபாவளிக்கு அறிமுகம் செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் தான் ஜெர்மன் கார் நிறுவனமான வோல்ஸ்வேகன் நிறுவனத்துடன் கூட்டு சேர பங்குகளை வாங்குவதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
