அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேக் அமெரிக்கா கிரேட் அகெயின் என்ற கொள்கையின் கீழ் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இது அனைத்தும் வானில் எறிந்த பந்து போல திரும்ப அமெரிக்காவையே பாதித்தது. முதலில் கனடா, மெக்சிகோ, சீனா மீது வரி, அதன் பின்பு 75 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி விதித்தார் டிரம்ப். இவருடைய அறிவிப்பு முதல் சில நாட்களில் டாலர் மதிப்புக்கும், பத்திர சந்தைக்கும் சாதகமாக இருந்தாலும் அதன் பின்பு அமெரிக்கா எந்த அளவுக்கு உலக நாடுகளை நம்பியுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்தது மூலம் பெரும் சரிவை சந்திக்க துவங்கியது.
இதன் அடிப்படையில் 75 நாடுகள் மீது விதிக்கப்பட்ட ரெசிப்ரோக்கல் வரி அமெரிக்க ஆட்டோமொபைல் துறையை அதிகளவில் பாதித்துள்ளது. ஏற்கனவே இதுக்குறித்து அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டிரம்ப்-யிடம் முறையிட்ட நிலையில் தற்போது வால்வோ முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வோல்வோ குழுமம் அமெரிக்காவில் உள்ள தனது முக்கிய உற்பத்தி ஆலைகளில் தொழிலாளர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்த ஆட்டோமொபைல் நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் மூன்று முக்கிய ஆலைகளில் சுமார் 550 முதல் 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதில் பென்சில்வேனியாவின் மாகுங்கி நகரில் அமைந்துள்ள மேக் டிரக்ஸ் ஆலையும், வர்ஜீனியாவின் டப்ளின் ஆலையும் மற்றும் மேரிலாந்தின் ஹேகர்ஸ்டவுன் ஆலையும் அடக்கம். இந்த 3 முக்கிய இடங்களில் உள்ள 3 வோல்வோ குழுமத்தின் தொழிற்சாலைகளில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக வோல்வோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வோல்வோ குழுமம் வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 20,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகும். தற்போது அறிவிக்கப்பட்ட 800 ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு அடிப்படை முக்கிய காரணம், டிரம்ப் விதித்த வரியும், வர்த்தக தடை வாயிலாக உருவான நிலையற்ற பொருளாதாரச் சூழலின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து தான் உதிரிபாகங்களையும், முக்கிய பாகங்களையும் இறக்குமதி செய்து முழு வாகனமாக தயாரிக்கிறது. தற்போது ஆட்டோமொபைல் துறை மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தயாரிப்பதில் பெரும் சவால் உள்ளது.
இதேபோல் வரியோடு பொருட்களை இறக்குமதி செய்தால் வாகனத்தின் விலையும் அதிகரிக்க கூடும், விலை அதிகரித்தால் வர்த்தகம் குறையும். இதனால் வோல்வோ உட்பட பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதல் அடி: இதுவரையில் டிரம்ப் வரியால் டெக் துறை மட்டுமே பணிநீக்கம் அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோமொபைல் துறையில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப்-ன் ஒவ்வொரு அறிவிப்பும் தற்போது சர்வதேச அளவில் வர்த்தகம் மற்றும் பொருளாதார அறிவிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கையை அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகின் முன்னணி நாடுகளிலும் குறைத்துள்ளது. இதற்கு காரணம் எப்போது வேண்டுமானாலும் ரெசிஷன் வரலாம் என்ற அச்சம் தான்.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?



Click it and Unblock the Notifications