டெல்லி: இந்தியா பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் இது வரவிருக்கும் ஆண்டுகளில் வளர்ச்சி இதே போல் குறையும் என்றும் பீதியை கிளப்பி வருகிறார்கள் சில பொருளாதார நிபுணர்கள்.
ஆனால் இவற்றிற்கெல்லாம் எதிர்மாறாக இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார சங்கத்தின் 102-வது ஆண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரம் சில சவால்களை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி உண்மை தான்
இந்த வீழ்ச்சியால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது உண்மைதான். மேலும் இதனால் சில சவால்களை எதிர் கொண்டுள்ளது உண்மை தான். ஆனால் எவ்வாறயினும் கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி மற்றும் உலகளாவிய மந்த நிலையை அடுத்து நாடு கடந்த காலங்களில் இதே போன்ற சரிவைக் எதிர்கொண்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அதிக வளர்ச்சி கண்டு முன்னேறியது என்று அவர் கூறினார்.
பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்
கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திவால்நிலை மற்றும் ஜிஎஸ்டி விகிதங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பொருளாதாரத்தை மேலும் வலுவாக மாற்றுவார்கள் என்றும் நாயுடு தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை
ஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் 66 லட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய துணை ஜனாதிபதி, பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கான அதிரித்து வரும் போக்கையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் வங்கித்துறையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், வாராக்கடன் சிக்கலை சமாளிப்பதற்காகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருவது விவசாயமே. எனினும் நீண்ட கால தள்ளுபடிகள் மற்றும் மானியங்கள் என்பது நீண்டகாலத்திற்கு கொடுக்க முடியாதவை என்றும் எச்சரித்தார். மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சிக்கு கிராமப்புற பண்னை அல்லாத நடவடிக்கைகள் சமமாக முக்கியமானவை என்றும் கூறியுள்ளார்.
ஆறுதல் தரும் விஷயம்
இந்த நிலையில் 2022க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது நமது தேசிய தீர்மானமாகும். நாயுடு ஒரு நிலையான மற்றும் ஊதியம் தரும் கிராமப்புற பொருளாதாரத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார். மற்ற பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரம் அடுத்த ஆண்டிலும் வீழ்ச்சி காணும் என்று கூறியிருக்கும் நிலையில், துணை குடியரசு தலைவர் கூறியிருப்பது சற்றே ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications