வால்மார்ட்டின் உள்ளே நடக்கும் சர்ச்சைகள்.. H1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்தா?

உலகின் முன்னணி பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் தொழில்நுட்பப் பிரிவில், பெரும் சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. சரிபார்க்கப்படாத சில தகவல்களின்படி, H-1B விசா வைத்திருக்கும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய மோசடி நடந்துள்ளதாகவும், இந்த சம்பவத்திற்காக உலகளாவிய தொழில்நுட்பப் பிரிவின் ஒரு துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த வதந்திகள், அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு மத்தியில் ஒருவித அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள், வால்மார்ட் ஊழியர்கள் தங்கள் பணி அனுபவங்களைப் பற்றி விவாதிக்கக்கூடிய ஒரு தளமான பிளைண்ட் (Blind) வெளியிட்டுள்ளது. அங்குள்ள ஒரு பயனர், வால்மார்ட்டில் மோசடி நடந்திருப்பதாகக் கூறினார். சுவிட்சர்லாந்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான CTOL டிஜிட்டல் சொல்யூஷன்ஸ் கூட, இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இருப்பினும், இதுவரையில் வால்மார்ட் நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிக்கையையும் வெளியிடவில்லை, இதனால் இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

 வால்மார்ட்டின் உள்ளே நடக்கும் சர்ச்சைகள்.. H1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்தா?

விசா முறைகேடுகளா?: இந்தக் குற்றச்சாட்டுகள், சமூக வலைத்தளங்களான X மற்றும் ரெடிட் போன்ற தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. முக்கியமாக, ஒரு X கணக்கு, வால்மார்ட் ஒரு சில குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து, மற்ற நிறுவனங்களுடனான தொடர்புகளைத் துண்டித்ததாகக் குறிப்பிட்டது. மேலும், இதன் விளைவாக சுமார் 1,200 ஒப்பந்ததாரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்த விவகாரத்தில் ஒரு துணைத் தலைவர் லஞ்சம் பெற்றதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த வதந்திகளை உறுதிப்படுத்த இதுவரை எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை.

வால்மார்ட், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருந்தது. அப்போதும்கூட, இந்தப் பணிநீக்கங்கள் அமெரிக்கர்களுக்குப் பதிலாக H-1B விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்த எடுக்கப்பட்ட முடிவு என்று சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றம் சாட்டினர். ஆனால், வால்மார்ட் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இப்போது, இந்த புதிய வதந்திகள் மீண்டும் ஒருமுறை H-1B விசா வைத்திருப்பவர்கள் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளன.

இந்தியர்களிடையே பெருகும் அச்சம்!: சரிபார்க்கப்படாத இந்த வதந்திகள், குறிப்பாக இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பான ஒரு ரெடிட் மன்றத்தில், வால்மார்ட் துணைத் தலைவர் மோசடி, அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்? என்ற தலைப்பில் ஒரு விவாதம் தொடங்கியது.

பல பயனர்கள், இது போன்ற உள் மோசடிகள் தொழில் உலகில் மிகவும் பொதுவானவை என்றும், இது ஒரு சமூகத்தின் மீது எதிர்மறையான பார்வையை ஏற்படுத்தக்கூடும் என்றும் கருத்து தெரிவித்தனர். இது போன்ற வெளிப்படையான பாகுபாடுகள் மற்றும் முறைகேடுகள் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகின்றன என்று ஒரு பயனர் வேதனையுடன் குறிப்பிட்டார். இன்னொருவர், ஒரு சமூகம் மோசடிக்காரர்கள் என்று முத்திரை குத்தப்படும்போது என்ன நடக்கும் என்பதை வரலாறு காட்டுகிறது வன்முறை எப்போதும் தொடரும் என்று எச்சரித்தார்.

இந்த வதந்திகள், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற சரிபார்க்கப்படாத தகவல்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பி, தொழில்முறை சூழலில் ஒருவித பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இந்த விவகாரம் குறித்து வால்மார்ட் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும்போதுதான் முழு உண்மை நிலையும் தெரியவரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+