இந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனமாகத் திகழும் போன்பே 2023ஆம் ஆண்டுக்குள் ஐபிஓ மூலம் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் போன்பே பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் 2023ஆம் ஆண்டுக்குள் 7 முதல் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பங்குச்சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளது.
ஐபிஓ-வில் இறங்கும் போது பிளிப்கார்ட் குழுமத்தில் இருந்து போன்பே நிறுவனத்தைத் தனியாகப் பிரித்துப் பட்டியலிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தை அமெரிக்காவிலா அல்லது இந்தியாவில் பட்டியலிடுவதா என்பதை ஆலோசனை செய்து வருகிறது வால்மார்ட் நிர்வாகக் குழு.
போன்பே தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான் பே மற்றும் கூகிள் பே நிறுவனங்களுடன் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றப் போட்டி போட்டு வருகிறது.
7 பில்லியன் டாலர்
மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் 2019ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், போன்பே நிறுவனம் 7 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்ததுள்ளாகத் தெரிவித்திருந்தது. மேலும் பிளிப்கார்ட் 2022ஆம் ஆண்டுப் போன்பே-வின் தாய் நிறுவனமான பிளிப்கார்ட் பங்குச்சந்தையில் இறங்க உள்ளதாகத் திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதனால் அடுத்தடுத்த வருடம் பிளிப்கார்ட்-ன் நிறுவனங்கள் வரிசையாகப் பங்குச்சந்தையில் இறங்க உள்ளது.
லாபம்
தற்போது பிளிப்கார்ட் மற்றும் போன்பே வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும் அதிகளவில் செலவு செய்து வருகிறது. இதனால் லாபத்தைக் காட்டிலும் நஷ்டம் அதிகமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்ட வால்மார்ட் நிர்வாகம், பிளிப்கார்ட் மற்றும் போன்பே நிறுவனத்தை லாபகரமான வர்த்தக முறைக்கு வழித்தடம் அமைத்திடுங்கள் என உத்தரவிட்ட நிலையில், போன்பே 2022ஆம் ஆண்டு லாபகரமான நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதன் பின்பு தான் போன்பே பங்குச்சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
தற்போது போன்பே நிறுவனத்தில் சுமார் 23 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதில் மாதம் சராசரியாக 9 கோடி வாடிக்கையாளர்கள் போன்பே சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
போன்பே சமீபத்தில் வருமானம் மற்றும் வர்த்தக ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு 6 இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சவல் பண்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. தற்போது சுமார் 15,000 நகரங்களில் இருந்து இத்திட்டங்களில் முதலீடு குவிந்து வருவதாகப் போன்பே தெரிவித்துள்ளது.
சமீர் நிகாம்
இந்தக் கொரோனா காலத்தில் போன்பே தளத்தில் சுமார் 11 மில்லியன் வர்த்தகர்களை இணைத்துள்ளதாகவும், இதனால் தற்போது போன்பே சேலை சுமார் 5,00,000 இந்திய நகரங்களில் இருப்பதாகவும் போன்பே நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சமீர் நிகாம் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் போன்பே தளத்தில் சுமார் 20 மில்லியன் வர்த்தகர்களை இணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் சமீர் நிகாம் தெரிவித்துள்ளார்.
ஐபிஓ
இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகம் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் அடுத்த 5 வருடத்தில் குறைந்தது 20 முதல் 30 டிஜிட்டல் வர்த்தக நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முன்னோடியாக ஜியோ டிஜிட்டல் சேவைகள் இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications